சபாநாயகரின் அதிகாரிகள் குழுவில் உறவினர்களுக்கு பதவிகள்
சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன தனது அதிகாரிகள் குழுவில் உறவினர்களுக்கு பதவிகளை வழங்கியுள்ளதாக தெரியவருகிறது.
சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தனவின் தனிப்பட்ட அதிகாரிகள் குழுவின் விபரங்களுடன் சமூக வலைத்தளங்களில் ஆவணம் ஒன்று பகிரப்பட்டு வருகிறது.
இந்த ஆவணத்திற்கு அமைய சபாநாயகரின் பிரத்தியேக செயலாளராக அவரது சகோதரர் வசந்த யாப்பா அபேவர்தன கடமையாற்றி வருகிறார். இணைப்புச் செயலாளராக சரத் யாப்பா அபேவர்தன கடமையாற்றி வருவதுடன் ஊடக செயலாளராக இந்துனில் யாப்பா அபேவர்தன கடமையாற்றி வருகிறார். மக்கள் தொடர்பு அதிகாரியாக சமீர யாப்பா அபேவர்தன கடமையாற்றி வருகிறார்.