“போட் சிட்டி”யில் நடைப்பாதையை அமைத்த சீனா!
கொழும்பு போர்ட் சிட்டியில்( The Port City Marina Promenade) 500 மீற்றர் துாரத்தைக் கொண்ட பொதுமக்களுக்கான நடைப்பாதை திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான ராஜதந்திர உறவின் 65வது நிறைவை முன்னிட்டு இந்த நிகழ்வு இன்று இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் இலங்கையின் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, பிரதமர் மஹிந்த ராஜபக்ச, சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி ஆகியோர் பங்கேற்றனர். விருந்தினராக ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவும் பங்கேற்றார்.
இலங்கைக்கு இரண்டு நாள் பயணத்தை மேற்கொண்டு 18 அதிகாரிகளுடன் வந்துள்ள சீன வெளியுறவு அமைச்சர் இன்று இலங்கையின் ஜனாதிபதியையும் பிரதமரையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார்