மட்டக்களப்பில் பிரபல போதைப்பொருள் வியாபாரி மடக்கிப்பிடிப்பு
மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரபல போதைப்பொருள் வியாபாரி உட்பட மூவர் கும்புறுமூலை இராணுவச் சோதனைச் சாவடியில் வைத்து இன்று மடக்கிப்பிடிக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் மட்டக்களப்பு ஜெயந்திபுரம், இருதயபுரம், செட்டிப்பாளையம் ஆகிய இடங்களைச் சேர்ந்தவர்கள் என்பதுடன், இவர்களிடமிருந்து 100 கிராம் ஐஸ் போதைப்பொருளும், போதைப்பொருளைக் கடத்திச் செல்ல பயன்படுத்தப்பட்ட வாகனமும் கைப்பற்றப்பட்டுள்ளது.
காகித ஆலை இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசியத் தகவலுக்கமைய வாழைச்சேனை பொலிஸாரோடு இணைந்து மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையின் போது இவர்கள் மூவரும் மடிக்கிப் பிடிக்கப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட போதைப்பொருள் வியாபாரியே மட்டக்களப்பு மாவட்டத்தில் சகல பிரதேசங்களுக்கும் ஐஸ் போதைப்பொருள் விநியோகஸ்தராகச் செயற்பட்டு வந்துள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
அத்துடன், இவர்களுடன் தொடர்புடைய உள்ளூர் முகவர்கள், வியாபாரிகள், பாவனையாளர்கள் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள வியாபாரியிடன் விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளதுடன், கைது செய்யப்பட்ட வியாபாரி உட்பட மூவரையும், வாகனத்தினையும் நீதிமன்றில் ஆஜர்படுத்த வாழைச்சேனைப் பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
தீவிரமடையும் வானிலை! நிலத்தில் வெடிப்புகள் தென்பட்டால் அவதானம் - பல மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை
மயக்க மருந்து கொடுத்து கடத்தப்பட்ட சிறுமி வைத்தியசாலையில்! மட்டக்களப்பில் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்
குறைந்த காற்றழுத்தப் பகுதி! அறிவிப்புகளை கவனத்தில் கொள்ளவும் - வளிமண்டலவியல் திணைக்களத்தின் அவசர அறிவிப்பு
ஹார்முஸ் நீரிணையில் இந்திய வணிகக் கப்பல் ஒன்று தாக்கி மூழ்கடிப்பு: பிடியை இறுக்கும் ஈரான் News Lankasri
வருகிற ஞாயிற்றுக்கிழமை அன்று சன் டிவியில் ஒளிபரப்பாகும் மூன்று பிளாக்பஸ்டர் திரைப்படங்கள்.. இதோ பாருங்க Cineulagam
இந்த ஆண்டின் மிகப்பெரிய ப்ளாக்பஸ்டர் ‘துரந்தர்: தி ரிவெஞ்ச்’ ஜூன் 4 முதல் ஜியோஹாட்ஸ்டாரில் பிரீமியர்! Cineulagam