பாப்பாண்டவருக்கு அமெரிக்க அரசாங்கம் விடுத்துள்ள அழைப்பு
காசா பகுதியில் போர் முடிந்த பின் நடைபெறும் நிலைமாறு கால நிர்வாகத்தை மேற்பார்வையிட உருவாக்கப்பட்டுள்ள சமாதான சபையில் இணைமாறு புனித பாப்பாண்டவர் 14ம் லியோவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இந்த அழைப்பினை விடுத்துள்ளார் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த விவகாரத்தை வத்திக்கானுக்கான செயலாளர் பியெட்ரோ பரோலின் தெரிவித்துள்ளார்.

அந்த அழைப்பு வத்திக்கானுக்கு கிடைத்துள்ளதாக உறுதிப்படுத்தியதுடன், அதற்கு எவ்வாறு பதிலளிப்பது என்பது குறித்து தற்போது பரிசீலித்து வருவதாகவும் பியெட்ரோ உறுதி செய்துள்ளார்.
“இதுகுறித்து ஆய்வு செய்து வருகிறோம். ஒரு முடிவை எடுப்பதற்கு முன், இதை கவனமாக சிந்திக்க வேண்டிய அவசியம் உள்ளது. அதனால் பதில் அளிக்க சிறிது காலம் தேவைப்படும்,” என பரோலின் தெரிவித்தார்.
டிரம்ப் முன்மொழிந்துள்ள இந்த சமாதான சபை மூன்று அடுக்குகளைக் கொண்ட சிக்கலான நிர்வாக அமைப்பாக உருவாக்கப்பட்டுள்ளது என முன்னதாக தகவல் வெளியாகியிருந்தது.
இதில், டிரம்பும் இஸ்ரேல் ஆதரவாளர்களும் மேல்நிலையில் இடம் பெறும் வகையில் அமைக்கப்பட்டுள்ள நிலையில், பாலஸ்தீனர்கள் நகராட்சி மட்டத்திலான பொறுப்புகளுக்கு மட்டும் கட்டுப்படுத்தப்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்தக் குற்றச்சாட்டுக்கள் குறித்து டிரம்ப் நிர்வாகம் அதிகாரபூர்வ பதில்களை இதுவரையில் வெளியிடவில்லை.
விறுவிறுப்பாக11 மணிநேரம் நடைபெற்ற வாக்குப்பதிவு! ஆறு மணி கடந்து வரிசையில் நிற்கும் வாக்காளர்களுக்கு முக்கிய அறிவிப்பு
தமிழ்நாடு அரசியல் களத்தை அதிரவைத்துள்ள மாபெரும் புரட்சி! அதிரடி திருப்பங்களுடன் வெளியாகவுள்ள இறுதி முடிவுகள்
கனேடிய பொலிஸாரின் அலட்சியத்தால் பலியான யாழ். இளைஞனால் 6 பேருக்கு மறுவாழ்வு.. உடலை காண காத்திருக்கும் தாய்
புஷ்பா 2 சாதனையை முறியடித்ததா துரந்தர் 2.. குறைந்த நாட்களில் ரூ. 1000 கோடி வசூல் செய்த படம் எது..? Cineulagam
காந்திமதியை வீட்டைவிட்டு வெளியே போகச்சொன்ன கதிர், ஷாக்கான குடும்பம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் புரொமோ Cineulagam
விஜய் டிவியில் ஹிட் சீரியலில் என்ட்ரி கொடுத்துள்ள பாண்டியன் ஸ்டோர்ஸ் புகழ் சுஜிதா... எந்த தொடர் தெரியுமா? Cineulagam