மிக மோசமான கட்டத்தில் கட்டுநாயக்க சர்வதேச விமானம் நிலையம்
கட்டுநாயக்க விமான நிலையத்தின் சுகாதார பாதுகாப்பு நிலைமை மிகவும் வருத்தமளிப்பதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
விமான நிலையத்தில் பணிபுரியும் பொது சுகாதார ஆய்வாளர்கள் 6 பேருக்கு கோவிட் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளதென சங்கத்தின் தலைவர் உப்புல் ரோஹன தெரிவித்துள்ளார்.
மிகவும் அர்ப்பணிப்புடன் செயற்பட்ட 6 பேர் இவ்வாறு கோவிட் தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.
கடந்த காலங்களாக கட்டுநாயக்க விமான நிலையத்தின் பாதுகாப்பு தொடர்பில் சுகாதார பிரிவுகளிடம் சுட்டிக்காட்டியிருந்தோம். எனினும் இந்த விடயம் தொடர்பில் பெரிதாக ஒருவரும் கண்டுகொள்ளவில்லை.
கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வரும் வெளிநாட்டவர்கள் மற்றும் இலங்கையர்கள் சுகாதார பாதுகாப்பை மீறி செயற்படுகின்றார்கள்.
முகக்கவசம் அணிவதில்லை. அத்துடன் சுகாதார பரிசோதகர்களுக்கு ஓய்வு பெற அறையில்லாத நிலைமை ஒன்று காணப்படுகின்றது.
இவ்வாறான விடயங்கள் தொடர்பில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்றால் கட்டுநாயக்க விமான நிலையத்தில் பணியாற்றும் சுகாதார பரிசோதகர்கள் அனைவரும் கடமையில் இருந்து விலக வேண்டிய நிலைமை ஏற்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
புலம்பெயர் தமிழர்களுடன் பேச விருப்பம்! - பிரித்தானியாவிடம் ஜனாதிபதி கோரிக்கை (பத்திரிக்கை கண்ணோட்டம்) |
டித்வா புயலின் பின் முக்கியத்துவம் பெறப்போகும் பலாலி விமான நிலையம் 17 மணி நேரம் முன்
கடை திறப்பு விழா முடிந்தது, அடுத்து தர்ஷன் கிளப்பிய பிரச்சனை, குணசேகரன் அடுத்த பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam
30 நொடிகளில் தப்ப முயன்ற 200 பேர்... சுவிட்சர்லாந்தை உலுக்கிய கோர சம்பவத்தின் பகீர் பின்னணி News Lankasri
பிரித்தானியாவில் கொல்லப்பட்ட இந்திய இளம்பெண் வழக்கு: அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள புதிய தகவல்கள் News Lankasri
பண பிரச்சனையை தீர்த்த அண்ணாமலை, ஆனால் கடைசியில் மனோஜ்-ரோஹினிக்கு ஷாக்... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam