இலங்கையில் பெரும் ஆபத்தாக மாறிவரும் பொலித்தீன் பாவனை! - அமைச்சர் வெளியிட்ட தகவல்
இலங்கையின் பல்பொருள் அங்காடிகளால் ஒவ்வொரு ஆண்டும் மொத்தம் 100 பில்லியன் பொலித்தீன் உறைகள் நுகர்வோருக்கு வழங்கப்பட்டு வருகின்றன. மேலும் 10 மில்லியன் மதிய உணவு தாள்கள் (Lunch Sheets) பயன்படுத்தப்படுகின்றன.
இவையே சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்துகின்றன என்று சுற்றுச்சூழல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
கொழும்பின் விஹாரமஹாதேவி பூங்காவில் இடம்பெற்ற உலக புவிதின நிகழ்வின்போது அவர் இதனைக்குறிப்பிட்டார். சுற்றுச்சூழலைப் பாதுகாப்பது என்பது மரங்களை நாட்டுவது என்று பலர் கருதுகின்றனர்.
எனினும் பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் முழு உலகிற்கும் கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்துகின்றன. உலகில் மதிய உணவுத் தாள்களைப் பயன்படுத்தும் (Lunch Sheets)ஒரே நாடு இலங்கை மாத்திரமேயாகும்.
இலங்கையின் மக்கள் தொகை 21 மில்லியன். எனினும் ஒவ்வொரு நாளும் 10 மில்லியன் மதிய உணவுத் தாள்கள் (Lunch Sheets)மக்களால் சுற்றுச்சூழல்களில் சேர்க்கப்படுகின்றன என்று அமைச்சர் கூறினார்.
நிகழ்வில் உரையாற்றிய கொழும்பு மாநகர முதல்வர் ரோஸி சேனநாயக்க,
ஒவ்வொரு நாளும் சுமார் ஒரு மில்லியன் மக்கள் கொழும்புக்கு வருகை தருவதாகவும், இதேபோன்ற எண்ணிக்கையிலான வாகனங்கள் நகரத்திற்குள் நுழைவதால் சுற்றுச்சூழல் மாசுபாடு மிக அதிகமாக இருப்பதாகவும் கூறினார்.
புதன் - சுக்கிரன் உருவாக்கும் லட்சுமி நாராயண ராஜயோகம் : இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாப்பாட் உறுதி! Manithan
ஹீரோவாக என்ட்ரி கொடுக்கும் இயக்குனர் ஷங்கர் மகன் அர்ஜித்... நாயகி, பட பெயருடன் வெளியான போட்டோ Cineulagam
தமிழன் பட பாணியில் நடைபெற்ற சம்பவம் - தமிழக அரசின் கடனை அடைக்க பணம் வழங்கிய வழக்கறிஞர் News Lankasri