பொலன்னறுவை தேசிய கிரிக்கெட் மைதானம் திறப்பு
பொலன்னறுவை தேசிய கிரிக்கெட் மைதானத்தின் முதல் கட்ட திறப்பு விழா இடம்பெற்றுள்ளது.
இந்த மைதானத்தின் திறப்பு விழா நேற்று(18.07.2024) இடம்பெற்றுள்ளது.
இலங்கை கிரிக்கெட் “தேசிய அபிவிருத்தி பாதை” திட்டத்தின் கீழ் இந்த புதிய மைதானம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
திட்டம்
திறமையான துடுப்பாட்ட வீரர்களுக்கு தேசிய அணியை பிரதிநிதித்துவப்படுத்துவதற்கு சம வாய்ப்புகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டதாக இந்த திட்டம் அமைந்துள்ளது.

மைதானத்தை நிர்மாணிப்பதற்காக இலங்கை கிரிக்கெட் மொத்தம் 170 மில்லியன் ரூபா செலவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் இலங்கையின் சுற்றுலா, காணி, விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ மற்றும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் கிரிக்கெட் சபையின் தலைவர் ஷம்மி சில்வா ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.
எனது நகரத்திற்குள் அமெரிக்க அதிகாரிகளுக்கு அனுமதி இல்லை: கிண்டலுக்குள்ளான கனேடிய மேயர் News Lankasri
தனக்கு தெரியாமல் செந்தில் செய்த காரியம், செம ஷாக்கில் மீனா... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
மில்லியன் வீரர்களுடன்... ஈரான் விடுத்த மிரட்டல்: மீண்டும் 10 நாள் அவகாசம் அறிவித்த ட்ரம்ப் News Lankasri