ஈ.பி.டி.பியின் தோளில் ஏறி ஆடவிட முடியாது: டக்ளஸ் தேவானந்தா (video)
யாழ். மாநகரசபை வரவு செலவு விவகாரத்தை வைத்து அரசியல் செய்யும் நோக்கம் ஈழமக்கள் ஜனநாயக கட்சிக்கு இல்லை எனவும், ஈ.பி.டி.பியின் தோளில் ஏறி ஆடவிட முடியாது என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
யாழ். ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று (28.12.2022) இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றில் வைத்து இவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், ஈழமக்கள் ஜனநாயக கட்சி தமிழ் மக்களின் அபிவிருத்தி, அரசியல் மற்றும் அன்றாடப் பிரச்சினைகள் தொடர்பில் தொடர்ந்து பயணித்துவரும் கட்சி.
ஈழமக்கள் ஜனநாயக கட்சி தமிழ் மக்களின் அபிவிருத்தி
அந்த வகையில் யாழ். மாநகரசபையின் வரவு செலவு திட்டத்தை வைத்து அரசியல் செய்யவேண்டிய நோக்கம் என்னிடமில்லை. ஆனால் எமது கட்சியின் ஆதரவில்லாமல் வரவு செலவு திட்டத்தை நிறைவேற்ற முடியாது.
கடந்த வாரம் யாழ். மாநகரசபையின் வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்ட போது நாம் அதில் பங்கு கொள்ளவில்லை அதற்கு பல காரணங்கள் உண்டு.
மாநகர முதல்வர் தெரிவில் எமது கட்சி ஆதரவை வழங்கிய நிலையில் சபையினால் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி விடயங்களில் எமது கட்சி புறக்கணிக்கப்படுகிறது.
யாழ். மாநகர சபையின் வரவு செலவு திட்டம்
மாநகர சபையில் ஆதிக்கமுள்ள எமது கட்சி மீது தொடர்ச்சியாக இவ்வாறான செயற்பாடுகள் இடம்பெற்றுவரும் நிலையில் தொடர்ந்தும் ஈ.பி.டி.பியின் தோளில் ஏறி ஆடவிட முடியாது.
ஆகவே யாழ். மாநகர சபையின் எதிர்வரும் வரவு செலவு திட்டத்தை ஆதரிப்பது
தொடர்பில் என்னிடம் சம்பந்தப்பட்டவர்கள் இதுவரை பேசவில்லை கட்சி
அங்கத்தவர்களுடன் பேசினார்களோ தெரியவில்லை என தெரிவித்துள்ளார்.



