நாட்டில் என்ன நடக்கும், எப்போது நடக்கும்? என்று எவருக்கும் தெரியாத நிலை! றிசாட் தெரிவிப்பு

corona virus colombo vavuniya rishad bathiudeen
By Independent Writer Apr 13, 2021 05:51 PM GMT
Report

இந்த நாட்டில் என்ன நடக்கும்? எப்போது நடக்கும்? என்று எவருக்கும் தெரியாத அச்சமான சூழலை அரசு ஏற்படுத்தியிருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் றிசாட் பதியூதீன் தெரிவித்துள்ளார்.

வவுனியாவிற்கு இன்று விஜயம் செய்த அவர் பல்வேறு கிராமங்களிற்குப் பயணம் செய்து மக்களைச் சந்தித்தார்.

இதன்பின்னர் ஊடகங்களிற்குக் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

எப்படியாவது என்னைச் சிறையிலே அடைக்க வேண்டும் என்று எத்தனையோ பொய் குற்றச்சாட்டுக்கள், முறைப்பாடுகளைச் செய்தும் பலன் கிடைக்காத போது, மன்னாருக்கு வாக்காளர்களைப் பேருந்தில் அழைத்துச்சென்ற விடயத்தை முன்னிறுத்தி என்னைச் சிறையிலேயே அடைத்தார்கள். அதன்பிறகும் தொடர்ச்சியான சதிகளை இந்த அரசு செய்துகொண்டேயிருக்கின்றது.

குறிப்பாக கோவிட் தொற்று நோயினால் இறப்பவர்களின் சடலங்களைப் பலவந்தமாக எரிக்கும் சதியினை இந்த அரசாங்கம் செய்தது. எமது கருத்துக்களையும், மக்களின் வேதனைகளையும் அவர்கள் பொருட்படுத்தவில்லை.

ஜெனிவாவால் அந்த விடயம் இடைநிறுத்தப்பட்டது. அதன்பிறகு தமிழ்பேசும் சமூகம் சார்ந்து பேசுபவர்களின் குரல்களை நசுக்கும் சதி நடந்து கொண்டிருக்கின்றது.

கடந்த மாதம் அசாத் சாலியை கைது செய்தார்கள். அதேபோல அரசாங்கத்தின் பிழையான நடவடிக்கைகளை எதிர்த்துப் பேசுகின்ற அசல சம்பத் என்கின்ற சிவில் அமைப்பைச் சேர்ந்தவரைக் கைது செய்திருப்பதாக அறிகிறேன்.

இந்த நாட்டில் என்ன நடக்கும்? எப்போது நடக்கும்? யாருக்கு நடக்கும்? என்ன செய்வார்கள் என்பது தெரியாது.

அனைவரும் ஒரு பயந்த சுபாவத்தோடு வாழவேண்டும் என்று இந்த அரசு அச்சத்திலே வைத்திருக்கின்றது. கொழும்பைவிட்டுச் செல்லமுடியாத அளவிற்குப் பலவகையான தொல்லைகள் எங்களிற்கு வழங்கப்பட்டது.

அந்தவகையில் நான் சிறையிலிருந்தபோது எனக்காக மன்றாடிய அனைத்து மக்களுக்கும் நான் நன்றியுள்ளவனாகக் கடமைப்பட்டுள்ளேன் எனத் தெரிவித்துள்ளார்.

மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சூரிச், Switzerland

30 Jul, 2026
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

27 Jul, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, கொடிகாமம், வெள்ளவத்தை

26 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, London, United Kingdom

31 Jul, 2025
மரண அறிவித்தல்

யாழ். அத்தியடி, யாழ்ப்பாணம், London, United Kingdom, மெல்போன், Australia

29 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

12 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, நல்லூர், பரிஸ், France

01 Aug, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, புத்துவெட்டுவான், கிளிநொச்சி, Brampton, Canada

31 Jul, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Conflans-Sainte-Honorine, France, London, United Kingdom, Nanterre, France

01 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை கிழக்கு, யாழ்ப்பாணம்

26 Jul, 2021
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

28 Jul, 2026
மரண அறிவித்தல்

சரவணை கிழக்கு, Toulouse, France

29 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கந்தர்மடம், அத்தியடி, Geilenkirchen, Germany

30 Jun, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், கொழும்பு, Scarborough, Canada

27 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, மருதங்குளம், திருநாவற்குளம்

30 Jul, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Farnborough, United Kingdom

29 Jul, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Herzogenbuchsee, Switzerland

30 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US