கிழக்கு மாகாண கல்வியில் அரசியல் தலையீடுகள் பாரிய பிரச்சினையாகவுள்ளது: ஜோசப் ஸ்டாலின்
கிழக்கு மாகாண கல்வியில் அரசியல் தலையீடுகள் பாரிய பிரச்சினையாகவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை கூறியுள்ளார்.
இதன்போது தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,
''இலங்கையில் உள்ள கிழக்கு மாகாணத்தின் கல்வி செயற்பாடுகள் ஏனைய ஒன்பது மாகாணங்களை விட விசேடமான செயற்பாடுகளாகவுள்ளன. இதன் காரணமாக ஆசிரியர்கள், அதிபர்கள், கல்வி ஆலோசகர்கள் பல்வேறு பிரச்சினைகளுக்குள்ளாகியுள்ளனர்.
இது தொடர்பில் பல தடவைகள் கிழக்கு மாகாண ஆளுநர், கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர், கல்விப்பணிப்பாளர்களின் கவனத்திற்கு வலய கல்வி பணிப்பாளர்களினால் கொண்டு செல்லப்படுகின்றபோதிலும் எந்த செயற்பாடுகளும் முன்னெடுக்கப்படுவதில்லை.
இதற்கான முக்கிய காரணமாகக் காணப்படுவது என்பது அரசியல் தலையீடாகும். கிழக்கு மாகாண கல்வியில் காணப்படும் அரசியல் தலையீடு என்பது பாரிய பிரச்சினையாகவுள்ளது. இதற்கு பின்னணியில் யார் உள்ளார்கள் என்பது எங்களுக்குத் தெரியும்.
வலய கல்விப்பணிப்பாளர்கள் நியமனங்கள் மற்றும் அதிபர்கள் நியமனத்திலும் உரிய தகைமையுள்ளவர்களுக்கு வழங்கப்படாமல் அல்லது நியமனக்கொள்கைகளுக்கு மாறான வகையில் நியமனமங்கள் வழங்கப்படுகின்றது.
அதிபர், ஆசிரியர்கள் இடமாற்றங்கள் தொடர்பிலும் இவ்வாறான பிரச்சினைகள் உள்ளது. அரசியல்வாதிகளுக்குத் தேவையான வகையிலேயே இந்த செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றது. இந்த செயற்பாடுகளை இலங்கை ஆசிரியர் சங்கம் வன்மையாகக் கண்டிக்கின்றது. கல்வியை ஜனநாயக முறையில் கொண்டு செல்லவேண்டும்.
பரீட்சை கடமைகள் ஈடுபடுவதற்காக நியமனம் செய்யப்படுகின்றவர்களும் இன்று அரசியல் ரீதியாக நியமிக்கப்படுகின்றனர். இதற்கு நல்ல உதாரணம் மட்டக்களப்பு சிவானந்தா தேசிய பாடசாலையின் ஒரு ஆசிரியருக்குக் கூட பரீட்சை கடமைகளில் ஈடுபடச் சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை.
தேசிய பாடசாலையின் அதிபரை இடமாற்றுமாறு ஆசிரியர்கள், கல்விச்சமூகம்,தொழிற்சங்கம் என்பன ஒன்றாக இணைந்து போராடியபோது அந்த அதிபர் தொடர்ச்சியாக அங்கு வைக்கப்பட்டுள்ள நிலையில் அவருக்கு பரீட்சை கடமையினை ஆசிரியர்களுக்கு வழங்காததற்கு என்ன அதிகாரம் உள்ளது.
இந்த சிறிய
செயலே இந்த கல்வி நடவடிக்கைகளில் அரசியல்வாதிகளின் தலையீடு எவ்வாறு உள்ளது
என்பதற்கு உதாரணமாகும். இது தொடர்பில் பரீட்சைகள் ஆணைக்குழுவுக்கும்
அறிவித்துள்ளோம்.பரீட்சை கடமைக்கு நியமனம் பெறுவதற்கு அரசியல்வாதிகளின்
பின்னால் செல்லவேண்டிய நிலையுள்ளது'' இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்த் தலைவர்கள் ஒருபோதும் முடிவடையாத பேச்சுவார்த்தையின் எஜமானர்கள் 17 மணி நேரம் முன்

ரோஹினியை தரதரவென இழுத்து வெளியே தள்ளிய விஜயா, என்ன விஷயம் தெரிந்தது.. சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ Cineulagam

இந்தியன் வங்கியின் IND Super 400 நாட்கள் FD திட்டத்தில் ரூ.4,44,444 முதலீடு செய்தால்.., எவ்வளவு தொகை கிடைக்கும்? News Lankasri
