வவுனியாவில் வாக்குச்சீட்டை முகநூலில் பகிர்ந்த அரசியல் பிரமுகர் : எழுந்துள்ள சர்ச்சை
இலங்கை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் பொது வேட்பாளரை ஆதரிக்கும் கட்சியின் மத்திய குழு உறுப்பினரும், தமிழ் தேசிய பொதுக் கட்டமைப்பிற்கான வவுனியா மாவட்ட நிதிப்பொறுப்பாளருமான ஒரு அரசியல் பிரமுகர் தனது முகநூலில் ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குச்சீட்டை பொது வேட்பாளருக்கு புள்ளடி இடப்பட்டவாறு பகிர்ந்துள்ளார்.
நேற்றையதினம் (06) இரண்டாவது நாளாக தபால் மூல வாக்களிப்பு இடம்பெற்று வரும் நிலையில் குறித்த நபர் வாக்குச் சீட்டை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருப்பது தேர்தல் விதிமுறைகளை மீறியுள்ள செயல்பாடு என தேர்தல் கண்காணிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, குறித்த சமூக வலைத்தள பதிவிற்கு எதிராக வவுனியா மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர், ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்பு குழுவிடமும் தேர்தல் கண்காணிப்பு குழுக்களிடமும் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அறியப்படுகிறது.
மேலதிக தகவல் - ராகேஷ்
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
படப்பிடிப்பு தளத்தில் திடீர் சண்டை போட்டுக்கொண்ட மகாநதி சீரியல் நடிகர்கள்... வைரலாகும் வீடியோ Cineulagam
எல்லாமே எல்லை மீறிப்போய்விட்டது... 2026ஆம் ஆண்டு குறித்த வங்கா பாபாவின் மற்றொரு எச்சரிக்கை News Lankasri
முத்துவிடம் சிக்கிய க்ரிஷ் கடத்தல்காரர்கள், அடுத்து அருண் செய்த காரியம்... சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
யாருக்கும் தெரியாமல் மயிலை பார்க்க சென்ற மீனா, அவரது அம்மா சொன்ன விஷயம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam