இலங்கையில் உயிருக்கு போராடிய ஐரோப்பிய நாட்டவரை காப்பாற்றிய கடற்படை
தென்னிலங்கை கடலில் மூழ்கிய நிலையில் உயிருக்கு போராடிய வெளிநாட்டவரை கடற்படையின் சுழியோடிகள் காப்பாற்றியுள்ளனர்.
காலி, அஹூங்கல்ல கடற்கரையில் நீராடிக் கொண்டிருந்த 64 வயதான போலாந்து பிரஜை ஒருவர் கடல் அலைகளில் சிக்கியுள்ளார்.
கடற்கரையில் நேற்றையதினம் நீராடிக் கொண்டிருந்த வேளையில் எதிர்பாராத விதமாக கடல் அலைகளால் அடித்துச் செல்லப்பட்டுள்ளார்.
பாதுகாப்பு சுழியோடி
உடனடியாக மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்ட உயிர் பாதுகாப்பு சுழியோடி பிரிவினர், அவரை காப்பாற்றி முதலுதவி அளித்துள்ளனர்.
போலந்து பிரஜை மேலதிக சிகிக்சைகளுக்காக அருகில் இருந்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இலங்கைக்கு சுற்றுலா மேற்கொண்டிருந்த நிலையில் இந்த சம்பவத்திற்கு அவர் முகங்கொடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நல்லூர் கந்தசுவாமி கோவில் சந்தான கோபாலர் உற்சவம் & பட்டித்திருவிழா





மாதனமுத்தாக்களின் சோம்பேறிப் போராட்டமும் ஈழத் தமிழ் அரசியலும் 29 நிமிடங்கள் முன்

15 வயதில் திருமணம், கணவர் இல்ல, மகன்களை வளர்க்க இத செய்தேன்.. பாக்கியலட்சுமி செல்வி எமோஷனல் Manithan

ஓவர்சீஸில் தாறுமாறு வசூல் வேட்டை செய்துள்ள நடிகர் ரஜினியின் கூலி... அதிகாரப்பூர்வமாக வந்த தகவல் Cineulagam
