சிங்கள வாக்குகளுக்காக காய்களை நகர்த்தும் தென்னிலங்கை அரசியல்வாதிகள்

Gotabaya Rajapaksa Ranil Wickremesinghe
By Kamel Jun 22, 2024 08:54 AM GMT
Report

கோட்டாபய ராஜபக்சவுக்கு வாக்களித்த மக்கள் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிரான கொள்கைகளை கொண்டிருந்தவர்கள்.

மத்திய வங்கியை பிணைமுறை மோசடி, உயிர்த்த ஞாயிறுத் தற்கொலை கொண்ட தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு சம்பவங்கள் ரணில் உள்ளிட்ட அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டன என குற்றம் சுமத்தி கோட்டைபாயவை ஆட்சி பீடம் ஏற்றினர்.

எனினும் பின்னர் கோட்டாபயவை பதவியில் இருந்து துரத்தி அடிப்பதற்கு பாரிய மக்கள் கிளர்ச்சி எழுந்தது. இந்த மக்கள் போராட்டத்தின் இறுதியில் மீண்டும் ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டார்.

இது உலக வரலாற்றில் எங்கும் எப்போதும் இடம்பெறாத ஓர் சம்பவமாக கருதப்பட வேண்டும். ரணில் விக்ரமசிங்கவை விரட்டிய மக்கள் ஆணையை கொண்டு அவர் மீண்டும் ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

கொழும்பில் பாதாள உலகக்கும்பலை சேர்ந்த இருவர் கைது

கொழும்பில் பாதாள உலகக்கும்பலை சேர்ந்த இருவர் கைது

ஐக்கிய மக்கள் சக்தியும் ரணில் விக்ரமசிங்கவும்

ஐக்கிய மக்கள் சக்தியும் ரணில் விக்ரமசிங்கவின் ஐக்கிய தேசிய கட்சியும் ஒரே விதமான கொள்கைகளை கொண்டவை. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும் வேறு விதமான கொள்கையை கொண்டவை.

எனவே இவற்றின் கொள்கைகள் மாறுபட போவதில்லை. ராஜித்த சேனாரத்ன, கபீர் ஹாசிம் போன்றவர்கள் ரணில் தரப்பும், சஜித் தரப்பும் இணைந்து செயல்படுவது குறித்து பல்வேறு பேச்சு வார்த்தைகளையும் முன்னெடுக்கின்றனர்.

சிங்கள வாக்குகளுக்காக காய்களை நகர்த்தும் தென்னிலங்கை அரசியல்வாதிகள் | Policy Against Ranil Wickremesinghe

இரண்டு பிரிவுகளாக பிரித்து தேர்தலில் போட்டியிட்டால் தேசிய மக்கள் சக்தி வெற்றியீட்டும் என்பதனால் ராஜித்த இந்த முயற்சியை முன்னெடுக்கின்றார்.

எதிர்வரும் செப்டம்பர் 28ம் திகதி அல்லது அக்டோபர் ஐந்தாம் திகதி பெரும்பாலும் ஜனாதிபதி தேர்தல் நடைபெறகூடும்.

தெற்கில் சிங்கள வாக்குகளை பெற்றுக் கொள்ள ஒருவருக்கு ஒருவர் எதிரான அரசியலை செய்கின்றனர்.

2005இல் வடக்கிற்கு எதிராக 2010இல் தமிழருக்கு, எதிராக 2015மற்றுத் 2019 முஸ்லிம்களுக்கு எதிராக எமது கடந்த கால அரசாங்கங்கள் அனைத்தும் எதிர்ப்பு அரசியலின் ஊடாக ஆட்சி பீடம் ஏறியவை.

வாகன சாரதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு: செய்திகளின் தொகுப்பு

வாகன சாரதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு: செய்திகளின் தொகுப்பு

இந்திய அரசு சுதந்திரம்

இலங்கையின் அரசியல் கட்டமைப்பானது ஒரு தரப்பிற்கு எதிரான அரசியலை முன்னெடுக்கும் விதமாக காணப்படுகின்றது.

வடக்கு கட்சிகள் தெற்கே எதிராகவும் தெற்கு கட்சிகள் வடக்கிற்கு எதிராகவும் உருவாக்கப்பட்டுள்ளன. நாட்டில் குரோத அரசியலிலே முன்னெடுக்கப்படுகின்றது.

சிங்கள வாக்குகளுக்காக காய்களை நகர்த்தும் தென்னிலங்கை அரசியல்வாதிகள் | Policy Against Ranil Wickremesinghe

இவ்வாறான ஒரு பின்னணியில் நாட்டை ஒரு அங்குல மேலும் முன்னோக்கி நகர்த்த முடியாது.  இலங்கையில் இனவாதம் என்பது முழுக்க முழுக்க அரசியலாகும். தேசிய மக்கள் சக்தி இனவாத அரசியலுக்கு எதிரான தேசிய ஒற்றுமை அரசியலை முன்னெடுக்கின்றது.

1948 ஆம் ஆண்டு நாம் சுதந்திரம் பெற்று 1947 ஆம் ஆண்டு இந்திய அரசு சுதந்திரம் பெற்றுக்கொண்டது.

இந்தியா ஒரு பாரிய ராஜ்யமாகும்.  பல்வேறு மொழிகள் பல்வேறு கலாச்சாரங்கள் கொண்ட மக்கள் சமூகத்தை கொண்டது இந்தியாவின் தேசிய தலைவர்கள் இந்தியர் என்ற கொள்கை அடிப்படையில் அரசியல் செய்கின்றனர்.

இதன் காரணமாகவே அப்துல் கலாம் போன்ற தலைவர்கள் உருவாகின்றனர்.  இதன் காரணமாகவே மன்மோகன் சிங் பிரதமராக இருந்தார். பழங்குடியின பெண் ஒருவர் ஜனாதிபதியாக இருக்கின்றார்.

1948 ஆம் ஆண்டுக்கு முன்னரும் இலங்கையில் பிரிவினைவாத அரசியல் காணப்பட்டது.  எமது தேசிய தலைவர்களும் பிரிவினைவாத அரசியலை முன்னெடுத்தனர்.

தமிழர் பகுதியின் படுகொலைகளுக்கு பிரித்தானியாவில் இருந்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகள்

தமிழர் பகுதியின் படுகொலைகளுக்கு பிரித்தானியாவில் இருந்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகள்

30 ஆண்டுகால யுத்தம்

ஐக்கிய படுத்தும் அரசியலமை இடம் இருக்கவில்லை. நாம் எப்பொழுதும் பிரிவினை படுத்தல் தேசப்படுத்தல் அரசியலையும் முன்னெடுத்தும் இவ்வாறான அரசியல் தற்போது போதுமல்லவா?

30 ஆண்டுகால யுத்தம் நடந்தது பல்லாயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர்.  வடக்கு கிழக்கு தெற்கு பெற்றோருக்கு பிள்ளைகள் இலக்க நேரிட்டது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடத்தப்பட்டது.

இலங்கையில் அரசியல் ஆட்சி அதிகாரம் சில குடும்பங்களுக்கு வரையறுக்கப்பட்டிருந்தது.

சிங்கள வாக்குகளுக்காக காய்களை நகர்த்தும் தென்னிலங்கை அரசியல்வாதிகள் | Policy Against Ranil Wickremesinghe

பண்டாரநாயக்கள், ஜெயவர்த்தனக்கள், ராஜபக்சக்கள் ஆட்சி அதிகாரத்தை நடத்தினார்.   ஜனாதிபதியின் மகன் ஜனாதிபதியாக வேண்டும் அமைச்சரின் மகன் அமைச்சராக என்ற கலாச்சாரம் நீடித்து வருகின்றது.

இந்த நாட்டை இளைஞர்களின் கைகளில் ஒப்படைக்க வேண்டும் இலங்கையில் இடம்பெற்ற கண்டுபிடிக்கப்படாத கொலைகளின் பின்னல் அரசியல்வாதிகள் உள்ளன உங்கள் அனைவரின் ஆக்கபூர்வமான விமர்சனங்களை ஏற்றுக் கொள்ள தயார்.

பௌத்த மதத்திற்கு என்ன ஆகும் என பலர் கேள்வி எழுப்புகின்றனர் எங்களுடைய எதிர்வாதிகள் இது தொடர்பில் பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தி வருகின்றனர்.

எதிர்தரப்பினர் வர்த்தகர்களை சந்தித்தால் நாம் ஆட்சிக்கு வந்தால் வர்த்தக வர்த்தகர்களுக்கு பாதிப்பு என கூறுகின்றனர்.

மருத்துவர்களை சந்தித்தால் மருத்துவர்களுக்கு பாதிப்பு என கூறுகின்றனர் இவ்வாறு அவர்கள் சந்திக்கும் நபர்களுக்கு நாம் எதிரானவர்கள் என வெளிக்காட்டிக்கொள்ள முயற்சிக்கின்றனர்.

பௌத்தர்களை பார்த்தால் நாம் பௌத்த மதத்திற்கு எதிரானவர்கள் என கூறுகின்றனர்.

தேசிய அடையாள அட்டை தொடர்பில் ஆட்பதிவு திணைக்களத்தின் அறிவிப்பு

தேசிய அடையாள அட்டை தொடர்பில் ஆட்பதிவு திணைக்களத்தின் அறிவிப்பு

ஒன்பதாம் சரத்தின் அடிப்படை

அரசியல் சாசனத்தில் ஒன்பதாம் சரத்தின் அடிப்படையில் பௌத்த மதத்திற்கு வழங்கப்பட்டுள்ள முன்னுரிமையில் எவ்வித மாற்றங்களையும் நாம் செய்யப்போவதில்லை.

சிங்கள வாக்குகளுக்காக காய்களை நகர்த்தும் தென்னிலங்கை அரசியல்வாதிகள் | Policy Against Ranil Wickremesinghe

2015 முதல் 2019 ஆம் ஆண்டு வரையில் இலங்கையில் புதிய அரசியல் சாசனம் ஒன்றை உருவாக்குவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

இதன்போது இந்த பேச்சு வார்த்தையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பை பிரதிநிதித்துவப்படுத்தி சம்பந்தன் சுமந்திரன் ஆகியோர் பங்கேற்றனர்.  ரணில் விக்ரமசிங்க பங்கேற்கிறார், முஸ்லிம் காங்கிரஸின் ஹாக்கிம் தற்போதைய பிரதமர் தினேஷ் குணவர்தன போன்றவர்கள் இந்த பேச்சுவார்த்தையில் பங்கேற்றனர்.

இந்த புதிய அரசியல் அமைப்பு உருவாக்குவது குறித்த பேச்சு வார்த்தைகளின் போது எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் ஒன்பதாம் சரத்தினை மாற்றுவது தொடர்பில் பேச்சுக்கள் எழவில்லை.

கலந்து கொண்ட எல்லோரும் ஒன்பதாம் சரத்தினை ஏற்றுக் கொண்டிருந்தனர்.  ஒன்பதாம் சரத்தில் கை வைப்பதற்கு தமிழ் அரசியல்வாதிகளுக்கு தேவையில்லை.

அவ்வாறு இருக்கையில் நாம் ஏன் அதில் கை வைக்க போகின்றோம்.  நாம் தமிழர்களுக்கு முஸ்லிம்களுக்கோ எதிராக ஆட்சியை கைப்பற்ற விரும்பவில்லை.

இனவாதத்தை ஒழிக்கும் நோக்கில் நாம் ஆட்சிக்கு வருகின்றோம்.  தமிழ் பேசும் மக்களுக்கு பொதுவான பிரச்சனைகளும் உண்டு அதேபோல அவர்கள் தமிழ் மொழி பேசுவதனால் எதிர்நோக்கும் பிரச்சினைகளும் உண்டு. அவற்றை நாம் அடையாளம் கண்டுள்ளோம் பொதுப்பிரச்சினைகளுக்கு நாம் தீர்வு வழங்குவோம். 

  நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
மரண அறிவித்தல்

ஸ்ரீவைகுண்டம், India, சென்னை, India

25 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், மல்லாவி

28 Jan, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Toronto, Canada

23 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி வடக்கு, இடைக்குறிச்சி

25 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, கலிஃபோர்னியா, United States

25 Feb, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

தும்பளை, Toronto, Canada

02 Mar, 2020
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, ஈச்சமோட்டை

07 Mar, 2025
நன்றி நவிலல்

பருத்தித்துறை, Zürich, Switzerland

25 Jan, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, இளவாலை, கொழும்பு

24 Feb, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தம்பலகாமம், மருதங்கேணி, East Ham, United Kingdom

06 Mar, 2025
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், La Courneuve, France

24 Feb, 2021
மரண அறிவித்தல்

ஏழாலை வடக்கு, Brampton, Canada

22 Feb, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம்

23 Feb, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Toronto, Canada

22 Feb, 2026
மரண அறிவித்தல்

சரவணை மேற்கு, Riesenbeck, Germany

11 Feb, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், வடலியடைப்பு

09 Mar, 2022
மரண அறிவித்தல்

Vasavilan, Rüdtligen-Alchenflüh, Switzerland

19 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

25 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு, Kajang, Malaysia, London, United Kingdom, Birmingham, United Kingdom

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US