ஒக்லாந்தில் இலங்கையர் தீவிரவாத தாக்குதல்! - நியூஸிலாந்து பொலிஸார் விடுத்துள்ள கோரிக்கை
நியூஸிலாந்தின் மேற்கு ஒக்லாந்து பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான போலிச் செய்திகள் சமூக ஊடகங்களில் பரவி வருவது குறித்து அந்நாட்டு பொலிஸார் பொதுமக்களிடம் கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளனர்.
கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற இந்த தாக்குதல் குறித்து உறுதிப்படுத்தப்படாத தகவல்களை பெறும் போது மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் என பொலிஸார் வலியுறுத்தியுள்ளனர்.
இந்த தாக்குதலில் 7 பேர் காயமடைந்த நிலையில், தொடர்ந்தும் நான்கு பேர் ஒக்லாந்து நகர வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த விடயம் தொடர்பில் பொலிஸ் ஆணையாளர் ஆண்ட்ரூ கோஸ்டர் கருத்து வெளியிடுகையில்,
“இந்த தாக்குதல் குறித்து விசாரணைகள் மேற்கொண்டிருக்கும்போது, சமூக ஊடகங்களில் போலியான தகவல்கள் பகிரப்படுவது குறித்து பொலிஸாருக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது.
"இந்த சம்பவம் தொடர்பில் சமூக ஊடக தளங்களில் பரப்பப்படும் பெரும்பாலானவை தவறானவை என்பதை அறிந்திருக்கும்படி கேட்டுக்கொள்கின்றோம். அஹமது ஆதில் முகமது சம்சுதீன் என்பவர் மட்டுமே இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளார்.
இந்நிலையில், நாட்டு மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த நாங்கள் எங்களால் முடிந்த அனைத்தையும் செய்துள்ளோம். அத்தியாவசிய சேவைகள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் மக்கள் கூடும் இடங்களில் தற்போது அதிக பொலிஸார் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளதாக கோஸ்டர் கூறினார்.
"மக்கள் தங்கள் இயல்பான செயல்பாடுகளைப் பற்றி பாதுகாப்பாக உணர முழு உரிமை உண்டு." பாதுகாப்பற்றதாக உணரும் எவரும் 111 ஐ அழைக்க முடியும் என கோஸ்டர் மேலும் தெரிவித்துள்ளார்.
