ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையை ஆராய பொலிஸ் அதிகாரிகள் குழு நியமனம்
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையை ஆராய பொலிஸ் திணைக்களத்தின் அதிகாரிகள் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு அறிக்கையை கடந்த 21ம் திகதி குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் ஒப்படைக்குமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க உத்தரவிட்டிருந்தார்.
குழு நியமனம்
இந்நிலையில் குறித்த அறிக்கையை ஆராய்ந்து பார்க்க பொலிஸ் திணைக்களத்தில் அதிகாரிகள் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

அதன் தலைவராக சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அசங்க கரவிட நியமிக்கப்பட்டுள்ளார்.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர், பயங்கரவாத தடுப்புப் பிரிவின் பணிப்பாளர் மற்றும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர் ஆகியோர் அதன் ஏனைய உறுப்பினர்களாகும்.
முத்துவின் வாழ்க்கையில் கிடைத்த பெரிய வாய்ப்பு, செம கோபத்தில் ரோஹினி... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
ஹார்முஸ் நீரிணையில் பாதுகாப்பளிக்க முடியாது: கப்பல் நிறுவனங்களுக்கு அமெரிக்கா கைவிரிப்பு News Lankasri
T20 உலக கிண்ணத்தால் ஒத்திவைக்கப்பட்ட திருமணம் - நீண்டகால தோழியை மணக்கும் குல்தீப் யாதவ் News Lankasri
விஜய் டிவியில் விரைவில் களமிறங்கும் புத்தம் புதிய சீரியல்... இத்தனை இளம் கலைஞர்கள் நடிக்கிறார்களா? Cineulagam