மொரவெவ காட்டுப்பகுதியில் கஞ்சா பயிர்ச் செய்கை : சுற்றிவளைத்த பொலிஸார்
திருகோணமலை மொரவெவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கந்தளாய் காட்டுப் பகுதியில் சூட்சுமமான முறையில் 04 ஏக்கர் பரப்பளவில் கஞ்சா செய்கையை விசேட பொலிஸ் அதிரடிப்படையினர் முற்றுகையிட்டுள்ளனர்.
விசேட பொலிஸ் அதிரடி படையின் உதவி பொலிஸ் அத்தியட்சகர் சமன்த த சில்வாவிற்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைவாக திருகோணமலை சர்தாபுர விசேட பொலிஸ் அதிரடிப்படையினர் மற்றும் புல்மோட்டை விசேட பொலிஸ் அதிரடிப்படையினர் இணைந்து சுற்றுவளைப்பை மேற்கொண்டனர்.
இதன் போது நான்கு ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்ட நிலையில் கஞ்சா மரங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவரும் கைது செய்யப்படவில்லை
இதனையடுத்து மொரவெவ பொலிஸ் பொறுப்பதிகாரி கீர்த்தி சிங்ஹ உட்பட அவரது குழுவினர் விசேட பொலிஸ் அதிரடிப்படையினருடன் இணைந்து குறித்த கஞ்சா செடிகளை தீ மூட்டியதுடன் அங்கு அமைக்கப்பட்டிருந்த கூடாரத்தினையும் அகற்றினர்.

அத்துடன் குறித்த கஞ்சா பயிர் செய்கையை சூட்சுமமான முறையில் செய்துள்ளதாகவும் குறித்த பயிர்களுக்கு தண்ணீர் ஊற்றுவதற்காக கிணறு ஒன்றிணையும் அமைத்துள்ள நிலையில் மின்சாரத்தினை சூரியசக்தி ஊடாக பெற்றுள்ளதாகவும் விசாரணைகள் மூலம் தெரிய வந்துள்ளது.
குறித்த கஞ்சா பயிர் செய்கை தொடர்பில் எவரும் கைது செய்யப்படவில்லை எனவும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் மொரவெவ பொலிஸார் தெரிவித்தனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
தமிழர் அரசியலும் சிங்கள பௌத்த அரசியல் மனநிலையும்.. 2 மணி நேரம் முன்
முருகன் பிறந்த இடம் வடநாடா? கொந்தளித்த தமிழ் மக்கள்.. ஜூனியர் என்.டி.ஆர் படத்திற்கு எதிர்ப்பு.. Cineulagam
புகலிடக்கோரிக்கையாளர்கள் 10,000 பவுண்டுகள் செலுத்தவேண்டும்... அறிமுகமாகும் புதிய சட்டம் News Lankasri
பாக்கியராஜ் மறைவு... தனது ஆயுளில் 10 ஆண்டுகளை கொடுக்க ஆசைப்பட்ட சாந்தனு! கலங்க வைக்கும் காணொளி Manithan