சமிக்ஞையை மீறி மணல் ஏற்றிய டிப்பர் மீது பொலிசார் துப்பாக்கிச்சூடு
பொலிஸாரின் சமிக்ஞையை மீறிய மணல் ஏற்றிய டிப்பர் மீது பொலிஸார் துப்பாக்கிச்சூடு மேற்கொண்டுள்ளனர்.
கிளிநொச்சி - தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லாறுப் பகுதியில் நேற்றிரவு(7) சட்டவிரோதமாக அனுமதிப்பத்திரம் இன்றி இவ்வாறு பயணித்த டிப்பர் மீதே துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
துப்பாக்கிச்சூடு
இரவு 9.30 மணியளவில் மணல் ஏற்றிய டிப்பர் வாகனத்தை புளியம்பொக்கனை சந்தியில் வைத்து பொலிஸார் மறித்து சோதனை செய்ய முற்பட்டுள்ளனர்.
இதன்போது பொலிஸாரின் சமிக்ஞையை மீறி சென்ற டிப்பர் மீது பொலிஸார் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டனர்.
பொலிஸாரின் துப்பாக்கி பிரயோகத்தில் சில்லுப் பாதிக்கப்பட்ட நிலையில் காற்று போன நிலையில் டிப்பர் வாகனத்தை விட்டு சாரதி தப்பியோடியுள்ளார்.
மணல் மற்றும் டிப்பர் வாகனத்தை மீட்ட பொலிஸார் சாரதியை தேடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.









தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 6 நாட்கள் முன்

ஜீ தமிழின் கெட்டி மேளம் சீரியல் ரசிகர்களுக்கு வந்த ஷாக்கிங் தகவல்... என்ன இப்படி ஒரு முடிவு எடுத்துட்டாங்க Cineulagam

இந்த புகைப்படத்தில் விஜய்யுடன் இருக்கும் பிரபல நடிகர் யார் என்று உங்களுக்கு தெரியுமா? இதோ பாருங்க Cineulagam

நாளை முதல்... ஐரோப்பிய ஒன்றியத்துக்கு பயணிக்கும் பிரித்தானியர்களுக்கு ஒரு முக்கிய செய்தி News Lankasri
