இவரை தெரியுமா..! தமிழ் இளைஞரின் படத்தை வெளியிட்டு மக்களிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை
தமிழ் இளைஞர் ஒருவரின் புகைப்படத்தை வெளியிட்டு பொலிஸார், பொது மக்களின் உதவியை நாடியுள்ளனர்.
தேடப்படும் சந்தேகநபர் ஒருவரை அடையாளம் காண பொலிஸார், பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.
துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தின் சந்தேகநபர்
பொரளை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட லெஸ்லி ரனகல மாவத்தையில் கடந்த மே மாதம் 20ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் குறித்த நபர் சந்தேகநபராக அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இந்த விடயத்தை பொலிஸ் ஊடகப் பிரிவு அறிக்கையொன்றின் மூலம் தெரிவித்துள்ளது.
கொழும்பு 13, ஜம்படா வீதியை சேர்ந்த புஷ்பராஜ் விக்னேஸ்வரன் (27 வயது) நபரே சந்தேகநபராக அடையாளம் காணப்பட்டுள்ளார்.
மீன் வியாபாரம் செய்வதாக தகவல்
இவர் பிரதேசத்தை விட்டு தப்பியோடி தலைமறைவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
அத்துடன் அவர் தொழில் ரீதியாக மீன் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளவர் எனவும், வலது கையின் முழங்கைக்கு கீழே யானை முகம் ஒன்றை பச்சை குத்தியுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இவரைப் பற்றி ஏதேனும் தகவல் தெரிந்தால் பின்வரும் தொலைபேசி எண்களுக்கு தொடர்பு கொள்ளுமாறு பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
பணிப்பாளர் கொழும்பு குற்றப் பிரிவு - 071 859 1733
பொறுப்பதிகாரி கொழும்பு குற்றப் பிரிவு - 071 85917335
பொறுப்பதிகாரி விசாரணைப் பிரிவு - 071 8596503
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

மகனுக்கு நிச்சயிக்கப்பட்ட பெண்னுடன் காதல் - வருங்கால மருமகளை திருமணம் செய்யும் மாமனார் News Lankasri

இந்ர ராசியினர் அவர்களே நினைத்தாலும் பிரபலமாவதை தடுக்க முடியாதாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan
