நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு அதிகரிப்பு:உப பொலிஸ் பரிசோதகருடன் ஆறு பொலிஸாரின் பாதுகாப்பு
நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்புக்காக ஒரு உப பொலிஸ் பரிசோதகர் உட்பட ஆறு பொலிஸாரை கடமையில் ஈடுபடுத்துமாறு அமைச்சரவை பாதுகாப்பு பிரிவின் உதவி பொலிஸ் அத்தியட்சகர்(நடவடிக்கை), அந்த பிரிவின் பொறுப்பதிகாரிகளுக்கு அறிவித்துள்ளார்.

பிரதேச பொலிஸ் நிலையங்களில் இருந்து அமைச்சரவை பாதுகாப்பு பிரிவுக்கு தகுதியான அதிகரிகளை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு வழங்கப்பட வேண்டிய சம்பந்தப்பட்ட முக்கிய பிரமுகர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி பட்டியல் ஒன்றை பெற்றுக்கொள்ளுமாறும் பாதுகாப்புக்கு வழங்கப்படும் பொலிஸ் அதிகாரிகள் தொடர்பில் முக்கிய பிரமுகர்களின் விருப்பத்தை கடிதம் மூலம் பெற்றுக்கொள்ளுமாறும் உதவி பொலிஸ் அத்தியட்சகர், பொறுப்பதிகாரிகளுக்கு அறிவித்துள்ளார்.
நாட்டில் நடைபெற்று வரும் போராட்டங்களை நடத்தி வரும் மக்கள் அரசியல்வாதிகள் மீது கடும் அதிருப்தியில் இருந்து வருகின்றனர்.
இதனால், ஆத்திரம் கொண்டுள்ள மக்கள் அரசியல்வாதிகள் மீது தாக்குதல்களை நடத்தக் கூடும் என்ற காரணத்தினால், நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

என்னது, இவருக்கு இரண்டாம் திருமணமா.. பிரச்சனையில் சிக்கிக்கொண்ட சோழன்! அய்யனார் துணை சீரியல் புரோமோ Cineulagam
உக்ரைனிய வான்பரப்பை சூழ்ந்த ரஷ்ய ஏவுகணைகள்: சுட்டு வீழ்த்தப்பட்ட 600 க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் News Lankasri
இன்னும் 6 வாரங்கள்... ஐரோப்பாவின் மொத்த விமான சேவையும் ஸ்தம்பிக்கும்: வெளியான எச்சரிக்கை News Lankasri
பாடகியுடன் சுற்றித்திரியும் கணவர்... பிறந்த நாளில் ஆர்த்தி ரவி உருக்கம்! வைரலாகும் புகைப்படங்கள் Manithan
டாப் 5-வில் ஒரே ஒரு இடத்தை பிடித்த விஜய் டிவி.. மாஸ் காட்டும் சன் டிவி.. சீரியல் TRP விவரங்கள் Cineulagam