மகளிர் தினத்தில் 8 மாத கர்ப்பிணி பெண் எடுத்த விபரீத முயற்சி
சர்வதேச மகளிர் தினமான இன்று பெந்தோட்டை ஆற்றில் குதித்து உயிரை மாய்க்க முயன்ற இளம் கர்ப்பிணி பெண் ஒருவரை பொலிஸ் சார்ஜன் காப்பாற்றியுள்ளார் என அளுத்கம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த கர்ப்பிணிப் பெண், தனது கணவரின் துன்புறுத்தலை தாங்க முடியாமல், இன்று அளுத்கம நகரத்திற்கு வந்து, பெந்தோட்டை பாலத்தில் குதிக்க முயன்றுள்ளார்.
அந்த நேரத்தில் பெந்தோட்டை பாலத்திற்கு அருகில் அளுத்கம பொலிஸாரால் நிறுவப்பட்ட பொலிஸ் சோதனை சாவடி காரணமாக இந்த மரணம் தடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கர்ப்பிணி பெண்
அவரது உயிருக்கு எந்த ஆபத்தும் ஏற்படாமல், அண்டை வீட்டாரின் உதவியுடன் பொலிஸார் அவரை மீட்டுள்ளனர். 8 மாத கர்ப்பிணியான இளம் பெண்ணின் தாய், அளுத்கம பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்டு கர்ப்பிணி மகள் ஒப்படைக்கப்பட்டார்.

அத்துடன் அவரை சரியான முறையில் கவனித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தியதாக அளுத்கம பொலிஸ் பொறுப்பதிகாரி தலைமை ஆய்வாளர் ரமேஷ் ரத்னசிங்க தெரிவித்துள்ளார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடிக்க ஸ்டாலின் மற்றும் நிரோஷா வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா Cineulagam
கார்க் தீவுக்கு குறி! முக்கிய வான்வழி படைத் தளபதிகள் மத்திய கிழக்கிற்கு அனுப்பும் அமெரிக்கா News Lankasri