ஜனாதிபதியிடம் மனு கையளிக்க முற்பட்ட கேப்பாப்பிலவு மக்களை தடுத்த பொலிஸார்
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் (Ranil Wickremesinghe) மனு கையளிக்க முற்பட்ட கேப்பாப்பிலவு மக்களை பொலிஸார் தடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி தலைமையில் புதுக்குடியிருப்பு (Puthukkudiyiruppu) கலாசார மண்டபத்தில் இடம்பெற்ற மக்களுக்கு காணி உரிமம் வழங்கும் நிகழ்வின் போதே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் ஜனாதிபதியின் வருகையை முன்னிட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.
பலத்த பாதுகாப்பு
இதன்போது, இரண்டு உலங்கு வானூர்திகள் தரையிறக்கப்பட்டதுடன் அப்பகுதியிலுள்ள அனைத்து வீதிகளுக்கும் தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டிருந்தது.
மேலும், ஜனாதிபதியின் நிகழ்வுக்கு அழைக்கப்பட்டவர்களை தவிர வேறு யாரும் உட்செல்லாதவாறு பொலிஸ் மற்றும் இராணுவத்தினரைக் கொண்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.
இந்நிலையில், கேப்பாப்பிலவு மக்கள் தங்களது காணிகளை விடுவிக்க கோரி ஜனாதிபதியிடம் மனு கையளிக்க முற்பட்ட போதே இவ்வாறு குறித்த மக்கள் உட்பிரவேசிக்க பொலிஸார் தடை விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 5 நாட்கள் முன்

ரயிலில் இனிப்பு விற்கும் முதியவருக்கு ரூ.1 லட்சம் கொடுக்க வேண்டும்.., விவரம் தெரிந்தால் சொல்லுங்கள் என லாரன்ஸ் வேண்டுகோள் News Lankasri

வெளிநாட்டவர் வேலைவாய்ப்பிற்கு சிக்கல் - பிரித்தானியாவில் 2000 நிறுவனங்களின் விசா ஸ்பான்சர் உரிமங்கள் ரத்து News Lankasri

இரண்டு உசுரு எடுத்தாச்சு.. மகிழ்ச்சியில் குணசேகரன் டீம்! ஆனால் தர்ஷன் கொடுத்த ஷாக்.. நாளைய ப்ரோமோ Cineulagam

15 வயதுக்கு கீழ் உள்ள பிள்ளைகள் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை: பிரான்ஸ் ஆணையம் பரிந்துரை News Lankasri
