யாழில் கடத்தப்பட்டதாக கூறப்படும் இரு சிறுமிகளை மீட்ட பொலிஸார்
யாழ்ப்பாணத்தில் கடத்தப்பட்டதாக கூறப்படும் கோப்பாய் பகுதியைச் சேர்ந்த இரு சிறுமிகளை சாவகச்சேரி பொலிஸார் மீட்டுள்ளனர்.
நாவற்குழி பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து கடத்தப்பட்டதாக கூறப்படும் 14 மற்றும் 15 வயதுடைய இரண்டு சிறுமிகளே இவ்வாறு நேற்றைய தினம் மீட்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
சம்பவம் தொடர்பில் 20 மற்றும் 21 வயதுகளையுடைய ஊர்காவற்துறை பகுதியைச் சேர்ந்த இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்கள் இருவரும் சிறுமிகளுடன் அதே வீட்டில் தங்கியிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
மீட்கப்பட்ட இரண்டு சிறுமிகளும் வைத்திய பரிசோதனைகளுக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் சேர்ப்பிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.
பெண்களுடன் பக்கிங்ஹாம் அரண்மனையில் ஆண்ட்ரூ... புகாரளித்த அதிகாரியை மிரட்டிய லண்டன் பொலிசார் News Lankasri