முன்னிலை சோசலிசக் கட்சியின் தலைமையகத்தில் அத்துமீறி நுழைந்த பொலிஸார்
முன்னிலை சோசலிசக்கட்சியின் நுகேகொடையிலுள்ள தலைமையகத்தினுள் பொலிஸார் அத்துமீறிப் பிரவேசித்ததாக அக்கட்சி குற்றம்சாட்டியுள்ளது.
இது தொடர்பாக கட்சியின் கல்விப்பிரிவு செயலாளர் புபுது ஜயகொட ஊடகங்களுக்கு அறிவித்துள்ளார்.
நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள ஒருவரைத் தேடி வந்துள்ளதாக தெரிவித்து பொலிஸார் கட்சியின் தலைமையகத்தினுள் பலவந்தமாக பிரவேசித்த போதும், குறித்த நபர் தொடர்பான விபரங்களை வெளியிட மறுத்துள்ளனர்.
பொலிஸாரின் அத்துமீறிய நடவடிக்கை
வௌ்ளவத்தை மற்றும் மிரிஹான குற்றத்தடுப்புப் பிரிவு பொலிசின் இரண்டு வாகனங்களில் வந்த பொலிஸாரே இவ்வாறு அத்துமீறிப் பிரவேசித்துள்ளனர்.
பொலிஸார் வருகை தந்த போது கட்சியின் தலைமையகத்தினுள் ஊடக மாநாடு ஒன்று நடைபெற்றுள்ளது.
பொலிஸாரின் அத்துமீறிய செயற்பாட்டை கட்சி உறுப்பினர்கள் கண்டிக்கத் தொடங்கிய பின்னர் பொலிஸார் தாம் தேடி வந்தவர் அங்கு இல்லை என்று கூறி திரும்பிச் சென்றுள்ளதாகவும் புபுது ஜயகொட தெரிவித்துள்ளார்.
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 2 நாட்கள் முன்
128 ஆண்டுக்கு பின் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் - ஆனால் பாகிஸ்தான், இலங்கைக்கு வாய்ப்பில்லை News Lankasri
2007ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளிவந்த அழகிய தமிழ் மகன், வேல், பொல்லாதவன் படங்கள்.. பாக்ஸ் ஆபிஸ் வசூல் எவ்வளவு தெரியுமா? Cineulagam
சக்தியை முடித்த சந்தோஷத்தில் குணசேகரன், என்ன செய்வது என்ற பதற்றத்தில் ஜனனி...எதிர்நீச்சல் தொடர்கிறது ஸ்பெஷல் புரொமோ Cineulagam