முன்னிலை சோசலிசக் கட்சியின் தலைமையகத்தில் அத்துமீறி நுழைந்த பொலிஸார்
முன்னிலை சோசலிசக்கட்சியின் நுகேகொடையிலுள்ள தலைமையகத்தினுள் பொலிஸார் அத்துமீறிப் பிரவேசித்ததாக அக்கட்சி குற்றம்சாட்டியுள்ளது.
இது தொடர்பாக கட்சியின் கல்விப்பிரிவு செயலாளர் புபுது ஜயகொட ஊடகங்களுக்கு அறிவித்துள்ளார்.
நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள ஒருவரைத் தேடி வந்துள்ளதாக தெரிவித்து பொலிஸார் கட்சியின் தலைமையகத்தினுள் பலவந்தமாக பிரவேசித்த போதும், குறித்த நபர் தொடர்பான விபரங்களை வெளியிட மறுத்துள்ளனர்.
பொலிஸாரின் அத்துமீறிய நடவடிக்கை
வௌ்ளவத்தை மற்றும் மிரிஹான குற்றத்தடுப்புப் பிரிவு பொலிசின் இரண்டு வாகனங்களில் வந்த பொலிஸாரே இவ்வாறு அத்துமீறிப் பிரவேசித்துள்ளனர்.
பொலிஸார் வருகை தந்த போது கட்சியின் தலைமையகத்தினுள் ஊடக மாநாடு ஒன்று நடைபெற்றுள்ளது.
பொலிஸாரின் அத்துமீறிய செயற்பாட்டை கட்சி உறுப்பினர்கள் கண்டிக்கத் தொடங்கிய பின்னர் பொலிஸார் தாம் தேடி வந்தவர் அங்கு இல்லை என்று கூறி திரும்பிச் சென்றுள்ளதாகவும் புபுது ஜயகொட தெரிவித்துள்ளார்.
Bigg Boss: மேடையிலேயே வாந்தி எடுத்து மாஸ் காட்டிய விஜய் சேதுபதி! அடுக்கி வைத்துள்ள ரெட் கார்டு Manithan
எதிர்பார்க்காத போட்டியாளர் பிக் பாஸ் 9 வீட்டிலிருந்து வெளியேற்றம்.. அதிர்ச்சியில் ரசிகர்கள் Cineulagam
கனியை தொடர்ந்து பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய அந்த ’ஸ்டார்’ நடிகர்.. அட என்னப்பா நடக்குது Cineulagam