தென்னிலங்கையில் பரபரப்பு - பொலிஸார் துப்பாக்கிச் சூடு - ஒருவர் படுகாயம்
எல்பிட்டிய பகுதியில் பொலிஸார் துப்பாக்கி சூடு நடத்தியமையால் பரபரப்பு நிலை ஏற்பட்டுள்ளது.
ஊரகஸ்மன்ஹந்திய களுவலகொட பிரதேசத்தில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உரகஸ்மன்ஹந்திய பிரதேசத்தில் சந்தேகநபர் ஒருவரை கைது செய்யும் முயற்சியின் போது கூரிய ஆயுதத்தால் தாக்கியுள்ளார்.
இதன்போது பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
இராணுவத்தை விட்டு வெளியேறி ஊரகஸ்மன்ஹந்திய களுவலஹொட பிரதேசத்தில் வசிக்கும் நபர் ஒருவர் துப்பாக்கிச் சூட்டு தாக்குதலில் காயமடைந்துள்ளார்.
சந்தேக நபர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் தீர்த்தோற்சவம்




