போதை விருந்தில் பெண்களுடன் சிக்கிய பொலிஸ் அதிகாரிகள்
மொரட்டுவ கட்டுபெத்த பகுதியிலுள்ள விடுதி ஒன்றில் போதை விருந்தொன்றை நடத்திக் கொண்டிருந்த இரண்டு பொலிஸ் கான்ஸ்டபிள்களும் இரண்டு பெண்களும் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டதாக மொரட்டுவ பொலிஸார் தெரிவித்தனர்.
அங்குலான பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொலிஸ் விசேட பணியகத்தின் புலனாய்வு அதிகாரியாக கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரும், தெஹியத்தகண்டிய பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிளும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மொரட்டுவை தலைமையக பொலிஸ் பரிசோதகருக்கு கிடைத்த தகவலுக்கமைய அங்குலான பொலிஸ் கான்ஸ்டபிள் தங்குமிடத்தை சுற்றிவளைத்து சந்தேக நபர்களை சோதனை செய்துள்ளனர்.
போதைப்பொருள்
இதன் போது ஒரு கிராம் ஹேஷ் போதைப்பொருள் மற்றும் 20 மில்லிகிராம் போதைப்பொளை தெஹியத்தகண்டிய பொலிஸ் கான்ஸ்டபிள் கண்டுபிடித்துள்ளார்.
சந்தேகநபர்கள் இருவரிடமும் 260 மில்லிகிராம் போதைப்பொருள் , இலத்திரனியல் தராசு, மற்றும் ஏனையவை சந்தேகநபரிடம் இருந்து மதுபானம் மற்றும் போதைப்பொருள் பாவனைக்கு பயன்படுத்தப்படும் பல உபகரணங்களுடன் 40 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தெஹியத்தகண்டிய பொலிஸ் கான்ஸ்டபிள் கடமையாற்றிய போது இந்த விருந்தில் கலந்துகொண்டதாக தெரியவந்துள்ளது.

வடிவேல் பாலாஜி போல் கெட்டப் போட்டு மாறிய அவரது மகன் ஸ்ரீகாந்த்.. இதோ புகைப்படத்தை பாருங்க Cineulagam

இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் இந்திய விமானப்படை போர் பயிற்சி: களத்தில் Rafale, Sukhoi-30... News Lankasri

6 மாடி கட்டிடத்தின் ரகசிய அறை: பெரும் பணக்காரர்கள் பாதுகாக்கும் ரூ 12,500 கோடி மதிப்பிலான தங்கம் News Lankasri
