போதை விருந்தில் பெண்களுடன் சிக்கிய பொலிஸ் அதிகாரிகள்
மொரட்டுவ கட்டுபெத்த பகுதியிலுள்ள விடுதி ஒன்றில் போதை விருந்தொன்றை நடத்திக் கொண்டிருந்த இரண்டு பொலிஸ் கான்ஸ்டபிள்களும் இரண்டு பெண்களும் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டதாக மொரட்டுவ பொலிஸார் தெரிவித்தனர்.
அங்குலான பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொலிஸ் விசேட பணியகத்தின் புலனாய்வு அதிகாரியாக கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரும், தெஹியத்தகண்டிய பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிளும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மொரட்டுவை தலைமையக பொலிஸ் பரிசோதகருக்கு கிடைத்த தகவலுக்கமைய அங்குலான பொலிஸ் கான்ஸ்டபிள் தங்குமிடத்தை சுற்றிவளைத்து சந்தேக நபர்களை சோதனை செய்துள்ளனர்.
போதைப்பொருள்
இதன் போது ஒரு கிராம் ஹேஷ் போதைப்பொருள் மற்றும் 20 மில்லிகிராம் போதைப்பொளை தெஹியத்தகண்டிய பொலிஸ் கான்ஸ்டபிள் கண்டுபிடித்துள்ளார்.

சந்தேகநபர்கள் இருவரிடமும் 260 மில்லிகிராம் போதைப்பொருள் , இலத்திரனியல் தராசு, மற்றும் ஏனையவை சந்தேகநபரிடம் இருந்து மதுபானம் மற்றும் போதைப்பொருள் பாவனைக்கு பயன்படுத்தப்படும் பல உபகரணங்களுடன் 40 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தெஹியத்தகண்டிய பொலிஸ் கான்ஸ்டபிள் கடமையாற்றிய போது இந்த விருந்தில் கலந்துகொண்டதாக தெரியவந்துள்ளது.
19 நாள் முடிவில் துருவ் விக்ரமின் பைசன் காளமாடன் படம் செய்துள்ள மொத்த வசூல்... எவ்வளவு தெரியுமா? Cineulagam
ட்ரம்ப் - சவுதி மெகா ஒப்பந்தம்... தூக்கம் தொலைத்த இஸ்ரேல்: ஆபத்தான போர் விமானங்கள் விற்பனை News Lankasri
மீனாவிற்கு ஷாக் கொடுத்த செந்தில் என்ன செய்யப்போகிறார், பெரிய சிக்கலில் மயில்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 எபிசோட் Cineulagam
முத்துவிடமே நேரடியாக சிக்கப்போகும் ரோஹினி, எப்படி தெரியுமா?.. சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam