பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மக்கள் மீது தாக்குதல் (Video)
கிளிநொச்சி – பளை பிரதேசத்தில், இரவு நேர உணவகம் ஒன்றுக்குள் நுழைந்த குழு ஒன்று உணவகத்தில் இருந்தவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
இவ்வாறு தாக்குதல் நடத்திய குழுவில் பளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியும் அடங்குவதாக அவர்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில் பொலிஸ் பொறுப்பதிகாரி எனக் கூறப்படும் நபர் தாக்குதல் நடத்தும் காணொளியும் கிடைக்கப்பெற்றுள்ளது.
கையில் தடியுடன், இந்த உணவகத்தின் காசாளர் உள்ளிட்டவர்கள் இதன்போது தாக்கப்படுகின்றமை சிசிரிவி பதிவுகள் ஊடாக வெளிப்பட்டுள்ள நிலையில், அந்த தாக்குதலானது, கடந்த நவம்பர் 24 ஆம் திகதி இடம்பெற்றுள்ளதாக உறுதி செய்ய முடிந்தது.
முகக்கவசம் அணியாமல் இருந்தமையால் இந்த தாக்குதல் நடாத்தப்பட்டதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளதுடன், இது தொடர்பில் ஆராய உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஒருவரை நியமித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முகக்கவசத்துடன் உணவகத்தில் உணவருந்த முடியாது எனவும், முகக்கவசம் அணியமையால் தாக்குதல் நடாத்தப்பட்டதாக கூறப்படுவதை நம்ப முடியாது எனவும் தாக்குதலின் பின்னனியில் வேறு காரணம் இருக்கலாம் எனவும் பிரதேசவாசிகள் தெரிவித்தனர்.
புதிய அமைதி பேச்சுவார்த்தையை முன்மொழிந்துள்ள ஈரான்., நம்பிக்கையின்மையை வெளிப்படுத்திய அமீரகம் News Lankasri
அடுத்த கட்டத்திற்கு நகரும் ஈரான் போர்... இஸ்ரேலுக்கு அனுப்பப்பட்ட 6,500 டன் வெடிமருந்துகள் News Lankasri