ஹெரோயினுடன் பிரதமர் பாதுகாப்பு பிரிவின் பொலிஸ் உத்தியோகஸ்தர் கைது
பிரதமர் பாதுகாப்பு பிரிவின் பொலிஸ் உத்தியோகஸ்தகர் ஒருவர் ஹெரோயின் போதைப் பொருளுடன் நேற்று கைது செய்யப்பட்டதாக கண்டி தலைமை பொலிஸ் நிலையம் தெரிவித்துள்ளது.
இந்த சந்தேக நபர் கண்டி பொது சந்தைக்கு அருகில் மோசடி தடுப்பு பிரிவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கிரிக்கெட் அணி வீரர்கள் தங்கியிருக்கும் ஹோட்டலின் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தவர்
சந்தேக நபரான இந்த பொலிஸ் உத்தியோகஸ்தர் இலங்கை- ஆப்கானிஸ்தான் நாடுகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டியில் கலந்துக்கொண்டுள்ள இலங்கை அணியின் வீரர்கள் தங்கியிருக்கும் ஹோட்டலில் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தார்.
கைது செய்யப்பட்டுள்ள பொலிஸ் உத்தியோகஸ்தர் ஹெரோயின் போதைப் பொருளுக்கு அடிமையானவராக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
கண்டி தலைமை பொலிஸ் நிலையத்தின் மோசடி தடுப்பு பிரிவினர் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பொலிஸ் அதிகாரிகள் மத்தியில் போதைப் பொருளுக்கு அடிமையானவர்கள்
இதனிடையே பொலிஸ் திணைக்களத்தில் கடமையாற்றும் 500க்கும் மேற்பட்ட பொலிஸார், ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப் பொருளுக்கு அடிமையாகி இருப்பதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகி இருந்தன.
புதிய பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் மத்தியில் போதைப் பொருளுக்கு அடிமையானவர்கள் அதிகளவில் இருப்பதாக கூறப்படுகிறது.
கொழும்பு பொரள்ளை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவரும் அண்மையில் ஐஸ் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டிருந்தார்.
இந்த பொலிஸ் உத்தியோகஸ்தகர், போதைப் பொருளை பாவிக்கும் நபர்களுடன் இணைந்து கொள்ளையடிப்பு சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளார் என்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

பாகிஸ்தான் - இலங்கை போராட்டங்களின் பின்னணி 16 மணி நேரம் முன்

இது ரகசியமாக இருக்கட்டும்... லண்டனில் 12 வயது சிறுமியிடம் அத்துமீறிய தமிழரின் அருவருக்க வைக்கும் பின்னணி News Lankasri

மிகவும் ஆபத்தானவர், நெருங்க வேண்டாம்: தீவிரமாக தேடப்படும் தமிழர் தொடர்பில் லண்டன் பொலிசார் எச்சரிக்கை News Lankasri
