நார்கொட்டிக் இயக்குநர் இடமாற்றம்: திடுக்கிடும் இரகசியங்கள் கசிவு
நார்கொட்டிக் பணியகத்தில் ஐம்பது இலட்சம் ரூபா பண மோசடி தொடர்பில் நடைபெறும் விவாரணைகளையடுத்தே பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தின் (PNB) இயக்குநராகப் பணியாற்றிய சிரேஷ்ட பொலிஸ் கண்காணிப்பாளர் ஹேமால் பிரசாந்த இடமாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாது,
போதை பொருள் தொடர்பில் தகவல் வழங்கியவருக்கு சண்மானமாக வழங்க மன்னார் பொலிஸ் நிலையத்திற்கு வழங்கப்பட்ட ஐம்பது இலட்சம் ரூபா பணம் தேவையில்லை என அவர்கள் திருப்பியனுப்பியுள்ளனர்.
ஒப்புதல்
குறித்த பணம் நாகொட்டிக் இயக்குநருடன் நெருக்கமான PC ரங்கவின் மனைவியின் வங்கி வைப்பில் வைக்கப்பட்டுள்ளது.

கணக்காய்வு செய்யப்பட்ட போது, ஐம்பது இலட்சம் தொடர்பில் தெரிவந்த சமயத்தில் அதை மீள நாகொட்டிக் பணியக வைப்பில் இடுவதற்காக PC ரங்க தனது வீட்டை அடகு வைத்து அந்த பணத்தை வைப்பிலிட்டுள்ளார்.
ஆனால், வைப்பிலிட்ட திகதி மற்றும் மன்னார் பொலிஸார் திருப்பி அனுப்பிய திகதி ஆகியவற்றில் காணப்பட்ட குழப்பம் மற்றும் வித்தியாசங்கள் கணக்காய்வின் போது தெரியவந்தால் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் ஏற்கனவே விசாரணையைத் தொடங்கியுள்ளது என்றும் கூறப்படுகிறது.

அதன்படி, செப்டம்பர் 25ஆம் திகதி, பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தின் இயக்குநரை இடமாற்றம் செய்ய தேசிய பொலிஸ் ஆணையக்குழுவிடம் ஒப்புதல் கோரப்பட்ட நிலையில், அவர் இடமாற்றப்பட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
திடீரென கண்ணீர்விட்டு அழுத சோழன், அதைப்பார்த்த நிலா செய்த விஷயம்.. அய்யனார் துணை சீரியல் எபிசோட் Cineulagam
மற்றவர்களை அடக்கியாளவே பிறப்பெடுத்த டாப் 3 பெண் ராசிகள்... இவங்ககிட்ட வம்பு வச்சிக்காதீங்க! Manithan
ஐரோப்பிய நாடொன்றுக்கு எச்சரிக்கை விடுத்த டிரம்ப்: வர்த்தகத்தை நிறுத்த அமெரிக்கா திட்டம் News Lankasri