அமைச்சர் ஒருவருக்கு STF பாதுகாப்பு : மரிக்கார் எம்.பியின் வெளிப்படுத்தல்
பொது மக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற அலுவல்கள் அமைச்சருக்கு விசேட அதிரடிப்படை பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் குற்றம் சாட்டியுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அரசாங்கம் இரட்டை நிலைப்பாட்டை கடைப்பிடிப்பதாகவே தோன்றுகிறது.
இரட்டை வேடம்
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பாதுகாப்பு வழங்குவது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக அரசாங்கம் கூறினாலும், பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சருக்கு சிறப்பு பாதுகாப்பை ஏன் வழங்கிறது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சீருடை அணியாத விசேட அதிரடிப்படை அதிகாரிகள் குழுவால் இன்று (18.11.2025)பிற்பகல் 2:39 மணிக்கு நாடாளுமன்றத்திலிருந்து வெளியே அழைத்துச் செல்லப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் தனது தொலைபேசியில் இருந்த புகைப்படத்தைக் காட்டியுள்ளார்.
தேசிய பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டால்,பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சருக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டிய அவசியமில்லை என்று அவர் கூறியுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 18 பேர் உயிரிழப்பு - முன்னரே எச்சரித்த குடும்ப உறுப்பினர் News Lankasri
தர்ஷனை அடித்து அராஜகத்தை தொடங்கிய குணசேகரன், சக்தி நிலைமை... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam