பொலிஸார் வேடத்தில் மேற்கொள்ளப்பட்ட கொள்ளை சம்பவம்
பொலிஸ் உத்தியோகத்தர் என கூறிக்கொண்டு கொள்ளை சம்பவம் ஒன்றில் ஈடுபட்ட சந்தேகநபர் ஒருவரை கட்டுகஸ்தோட்டை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கண்டி - கட்டுகஸ்தோட்டையில் கடந்த 17ஆம் திகதி சந்தேகநபர் மேலும் பலருடன் இணைந்து இந்த கொள்ளைச்சம்பவத்தில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு நேற்றையதினம்(24.09.2023) கைதானவர் பகமூன பிரதேசத்தை சேர்ந்த 47 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொள்ளை சம்பவம்
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, கண்டி - கட்டுகஸ்தோட்டையில் கடந்த 17ஆம் திகதி சந்தேகநபர் மேலும் பலருடன் இணைந்து இந்த கொள்ளை சம்பவத்தை மேற்கொண்டுள்ளார்.

இந்த கொள்ளை சம்பவத்தில் திருடப்பட்ட மாணிக்கக்கல் சுமார் 12 இலட்சம் ரூபா பெறுமதியான நீல நிற மாணிக்கக்கல் என தெரிவிக்கப்படுகிறது.
குறித்த மாணிக்கக்கல்லை தான் வாங்க விரும்புவதாக முறைப்பாட்டாளருக்கு தொலைபேசியில் அழைப்பு விடுத்து, சந்தேக நபர் தனது சகா ஒருவருடன் காரில் வந்து மாணிக்கத்தை பரிசோதித்துள்ளார்.
பொலிஸார் விசாரணை
இதன்போது, மோட்டார் சைக்கிளில் பொலிஸ் அதிகாரி போல் வேடமணிந்து வந்த மற்றுமொரு சந்தேகநபர், மாணிக்கத்தை கொண்டு வந்த நபரை அச்சுருத்தி, மாணிக்கக்கல்லுடன் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய, பொலிஸ் வேடமணிந்து கொள்ளைச்சம்பவத்தில் ஈடுபட்ட சந்தேகநபரை பொலிஸார் நேற்றையதினம்(24.09.2023) கைது செய்துள்ளனர்.
மேலும், ஏனைய சந்தேக நபர்களை கைது செய்ய கட்டுகஸ்தோட்டை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
சீரியல் நடிகர் வெற்றி வசந்த், வைஷு வீட்டில் ஏற்பட்ட உயிரிழப்பு... சோகத்தில் குடும்பம், பிரபலம் பதிவு Cineulagam
சக்தியை கண்டுபிடிக்க போராடும் ஜனனி.. பார்கவியை வீட்டை விட்டு துரத்தும் ஆதி குணசேகரன்.. எதிர்நீச்சல் புரோமோ வீடியோ Cineulagam
ரஷ்ய பாதுகாப்புத்துறை அதிகாரிக்கு இணையத்தில் கிடைத்த தோழி: பின்னர் காத்திருந்த அதிர்ச்சி News Lankasri