பொலிஸ் விசாரணைகள் குறித்து திருப்தியில்லை - நிமால் புஞ்சிஹேவா
பொலிஸ் விசாரணைகள் குறித்து திருப்தி அடைய முடியாது என தேசிய தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் நிமால் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்றைய தினம் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இந்த விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளார்.
தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர்களுக்கு அச்சுறுத்தல்
தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அச்சுறுத்தல்கள் தொடர்பில் பொலிஸாரின் விசாரணைகள் குறித்து திருப்தி அடைய முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.
தேர்தல் ஆணைக்குழுவில் அங்கம் வகிக்கும் இரண்டு உறுப்பினர்களுக்கு டுபாயிலிருந்து கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, தேர்தல் நடவடிக்கைகளை ஆரம்பிப்பது குறித்த வர்த்தமானி அறிவித்தல் அச்சிடும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.