முள்ளியவளையில் மனித எச்சம் மீட்கப்பட்டமை தொடர்பில் மூவர் கைது!
முள்ளியவளை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட நாவல் காட்டு கிராமத்தில் பாழடைந்த கிணற்றில் இருந்து கடந்த 30.12.2020 அன்று மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளன.
இந் நிலையில் நீண்டகாலத்தின் பின்னர் கொலை குற்றவாளிகளாக இனம்காணப்பட்ட சந்தேக நபர்கள் மூவரை பொலிஸார் நேற்று (20.01.2022) கைது செய்துள்ளதாக முள்ளியவளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.
உயிரிழந்த நபர் தொடர்பிலான விசாரணைகளை முள்ளியளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம்.அன்வர்தீன் தலைமையிலான பொலிஸ் குழுவினர் விசாரணைகளை மேற்கொண்டு வந்துள்ளார்கள்.
குறித்த விசாரணை நடவடிக்கையின் போது உயிரிழந்த நபரின் மனைவி உட்பட உயிரிழந்தவரின் நண்பர்கள் இருவர் உள்ளிட்ட மூன்று பேரை கைதுசெய்துள்ளார்கள்.
பொன்னகர் பகுதியினை சேர்ந்த இருவரும் கேப்பாபிலவினை சேர்ந்த ஒருவருமே இவ்வாறு கைதுசெய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தும் நடவடிக்கையில் முள்ளியவளை பொலிஸார் ஈடுபட்டுள்ளதாக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.





ஐப்பசி மாதத்தில் அதிர்ஷ்ட காணும் 6 ராசியினர்- உங்க ராசியும் இருக்கா பாருங்க- இன்றைய ராசிப்பலன் Manithan

வயிற்றுல அடிச்சாங்க.. பாதிக்கப்பட்ட ஜாய் கிறிஸ்டா மகன் - கசிந்த குரல் பதிவுக்கு கிளம்பும் விமர்சனம் Manithan

சின்ன பிள்ளை தனமாக மனோஜ் செய்த விஷயம், விழுந்து விழுந்து சிரிக்கும் குடும்பத்தினர்... சிறகடிக்க ஆசை கலகலப்பான புரொமோ Cineulagam

உலகில் பரவும் மர்ம வியாதி... தொற்றுநோய் அச்சுறுத்தலை அறிவித்த நாடு: அதிகரிக்கும் எண்ணிக்கை News Lankasri
