முகப்புத்தகம் ஊடாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த போதைப்பொருள் நிகழ்வு: பொலிஸார் அதிரடி நடவடிக்கை
அவிசாவளை பகுதியில் போதைப்பொருள்களுடன் 12 இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அவிசாவளை - குருகல்ல பகுதியிலுள்ள விடுதி ஒன்றில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த போதைப்பொருள் விருந்து நிகழ்வில் வைத்தே இவர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த நிகழ்வானது விடுதியின் உரிமையாளரால் முகப்புத்தகம் ஊடாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை முதற்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
மேலதிக விசாரணை

கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்களிடம் இருந்து கஞ்சா போதைப் பொருளும், விடுதி உரிமையாளரிடம் இருந்து ஹஷிஸ் போதைப்பொருள் மற்றும் 22 மதுபான போத்தல்களும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் கைது நடவடிக்கை தொடர்பிலான மேலதிக விசாரணைகளை தீவிரமாக மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
Bigg Boss: மேடையிலேயே வாந்தி எடுத்து மாஸ் காட்டிய விஜய் சேதுபதி! அடுக்கி வைத்துள்ள ரெட் கார்டு Manithan
வயது உண்மை தெரிந்ததும் சரவணன் எடுத்த அதிரடி முடிவு, கதறி புலம்பும் மயிலு... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
டிசம்பரில் ஜாக்போட்.. 18 மாதங்களுக்கு பின் அதிர்ஷ்டத்தை கொட்டிக் கொடுக்கும் செவ்வாய் பெயர்ச்சி Manithan