போதைப் பொருளை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் ஒருவர் கைது
திருகோணமலை நான்காம் கட்டை பகுதியில் ஹெரோயின் போதைப் பொருளை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் சந்தேகநபர் ஒருவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸ் போதைப் பொருள் பணியகத்தின் திருகோணமலை பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து குறித்த சந்தேகநபரை சோதனையிட்டபோது அவரிடமிருந்து 14 கிரேம் 470 மில்லிகிரேம் ஹெரோயின் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபர் ஹெரோயின் போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்டு வருவதாக பல முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் இதேவேளை குறித்த நபரை பொலிஸார் கண்காணித்து கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் பொலிஸாருக்கு வழங்கப்பட்ட இரகசிய தகவலை அடுத்து இவர் சுற்றிவளைக்கபட்டதாகவும் தெரியவருகின்றது.
கைது செய்யப்பட்ட குறித்த சந்தேகநபரை பொலிஸ் போதைப் பொருள் பணியகத்தின்
திருகோணமலை பிரிவினர் உப்புவெளி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்ததாகவும் இன்று (15) செவ்வாய்க்கிழமை திருகோணமலை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை
எடுத்துள்ளதாகவும் உப்புவெளி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.