பொலிஸாரால் பொதுமக்களுக்கு துரித தொலைபேசி இலக்கம் அறிமுகம்
ஆயுதங்கள் மற்றும் குற்றச்செயல்கள் தொடர்பான தகவல்களை வழங்குவதற்காகப் பொதுமக்களுக்கு துரித தொலைபேசி இலக்கமொன்றை பொலிஸார் அறிமுகப்படுத்தியுள்ளனர்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (22) நடைபெற்ற ஊடக சந்திப்பில் வைத்தே பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய இதனைத் தெரிவித்துள்ளார்.
இதன்படி, 1997 என்ற துரித இலக்கத்துக்கு அழைப்பை எற்படுத்தி அவ்வாறான தகவல்களை அறிவிக்க முடியும் என பதில் பொலிஸ்மா அதிபர் கூறியுள்ளார்.
சட்ட நடவடிக்கை
இதேவேளை, பொலிஸாரினால் முன்னெடுக்கப்படும் குற்றவியல் விசாரணைகளைத் தடுப்பதற்கும் ஸ்திரமற்ற நிலையை ஏற்படுத்துவதற்குமான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகப் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்ன குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறானவர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

அமெரிக்கா, சீனாவின் மேலாதிக்கத்திற்கு அச்சுறுத்தல்: 3.5 பில்லியன் தங்கம் டெபாசிட் கண்டுபிடிக்கப்பட்ட நாடு News Lankasri

சர்ச்சைகளுக்கு நடுவில் குட் நியூஸ் சொன்ன ரவிமோகன்.. ஆடிப்போன திரையுலகம்- குவியும் வாழ்த்துக்கள் Manithan

பாகிஸ்தான், சீனாவுக்கு மேலும் ஒரு கெட்ட செய்தி... ET-LDHCM ஏவுகணையை சோதிக்க தயாராகும் இந்தியா News Lankasri

மருத்துவமனையில் ஏற்பட்ட சம்பவம், சீதாவை நினைக்கும் முத்து, என்ன ஆனது?.. சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
