நீதிமன்றம் உத்தரவு வழங்கியும் தாமதிக்கும் பொலிஸார்: முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு

Vavuniya Sri Lanka Police Investigation Northern Province of Sri Lanka Law and Order
By Parthiban Apr 09, 2024 11:56 PM GMT
Report

இந்த வருடம் சிவராத்திரி தினத்தன்று சைவ வழிபாட்டு சடங்குகளை சீர்குலைத்து, வவுனியாவில்(Vavuniya) உள்ள ஆலய வளாகத்தில் வைத்து கைப்பற்றப்பட்ட உழவு இயந்திரம் உள்ளிட்ட பல உபகரணங்களை நீதிமன்ற உத்தரவின் பேரில், பொலிஸார் உரிமையாளர்களிடம் மீள ஒப்படைக்க வேண்டி நிலைமை ஏற்பட்டுள்ளது.

வெடுக்குநாறி மலையில் அமைந்துள்ள ஆதிலிங்கேஸ்வர் ஆலயத்தில் ஒரு மாதத்திற்கு முன்னர் கைப்பற்றப்பட்ட மூன்று இலட்ச ரூபாய்க்கும் அதிக பெறுமதியுடைய பூஜைப் பொருட்கள் மற்றும் உணவுப் பொருட்களை பொலிஸார் இதுவரை மீள வழங்கவில்லை என ஆலய நிர்வாகத்தினர் குற்றம் சுமத்தியுள்ளனர்.

பொலிஸாரால் எடுத்துச் செல்லப்பட்ட அனைத்துப் பொருட்களையும் விடுவிக்கக் கோரி, ஆலய நிர்வாகத்தினரும், கைது செய்யப்பட்ட எட்டுபேரும் தாக்கல் செய்த மனுவை விசாரித்த வவுனியா மாவட்ட நீதிமன்றத்தின் உத்தரவுக்கமைய, ஏப்ரல் 04ஆம் திகதி, டெய்லருடன் கூடிய டெக்டர், ஒரு தண்ணீர் பௌசர் மற்றும் சமையலுக்குப் பயன்படுத்தப்படும் அலுமினிய பாத்திரங்களை பொலிஸார் விடுவித்தனர்.

தமிழ் பொது வேட்பாளர் விவகாரம்: தேசிய மக்கள் சக்தி விசனம்

தமிழ் பொது வேட்பாளர் விவகாரம்: தேசிய மக்கள் சக்தி விசனம்

3 இலட்சம் ரூபாய் பெறுமதி

50 கிலோ அரிசி, 10 கிலோ உழுந்து உள்ளிட்ட சில உணவுப் பொருட்கள், பத்தி, கற்பூரம் உள்ளிட்ட பூஜைப் பொருட்கள் மற்றும் பூஜைக்கு பயன்படுத்தப்படும் விளக்கு, மணி உள்ளிட்ட சில பொருட்கள் என சுமார் மூன்று இலட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்கள் இன்னமும் பொலிஸாரிடமே காணப்படுவதாக, ஆதிலிங்கேஸ்வர ஆலய நிர்வாக சபையின் செயலாளர் துரைராசா தமிழ்ச்செல்வம் ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார்.

நீதிமன்றம் உத்தரவு வழங்கியும் தாமதிக்கும் பொலிஸார்: முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு | Police Defying Court Order Vedukunari

அவற்றை விடுவிப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து சட்டத்தரணிகளுடன் கலந்துரையாடி வருவதாகவும் அவர் ஊடகவியலாளர்களிடம் மேலும் கூறினார்.

நீதிமன்ற உத்தரவை மீறி இரவு விசேட பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டதாக தெரிவித்து, வவுனியா மாவட்டம் நெடுங்கேணி பகுதியில் உள்ள வெடுக்குநாரி மலையில் அமைந்துள்ள ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் இரவு வழிபாடுகளில் ஈடுபட்டிருந்த எட்டு சைவர்கள் மற்றும் பூஜை பொருட்கள் உள்ளிட்ட உபகரணங்களை மார்ச் 8 ஆம் திகதி இரவு பொலிஸார் கைது செய்தனர்.

இவர்கள் மீதான குற்றச்சாட்டை நிரூபிப்பதற்கான ஆதாரங்கள் பொலிஸாரிடம் இல்லாததால் வழக்கை தள்ளுபடி செய்து அனைவரையும் விடுதலை செய்து மார்ச் 19ஆம் திகதி வவுனியா மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டது.

முள்ளியவளையில் மோட்டார்சைக்கிள் விபத்து: இளைஞன் பலி

முள்ளியவளையில் மோட்டார்சைக்கிள் விபத்து: இளைஞன் பலி

விடுக்கப்பட்ட கோரிக்கை 

பொலிஸார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யத் தவறியதால், இராசரத்தினம் விநாயகமூர்த்தி (30), சுப்பிரமணியம் தவபாலசிங்கம் (35), துரைராசா தமிழ்ச்செல்வன் (28), மகேந்திரன் நரேந்திரன் (29), சிவம் லக்ஷான் (28), கந்தசாமி கௌரிகாந்தன் (24), திலகநாதன் கிந்துயன் (28) மற்றும் ஆலய பூசாரி தம்பிராசா மதிமுகராசா (45) ஆகியோரை நீதிமன்றம் விடுதலை செய்தது.

நீதிமன்றம் உத்தரவு வழங்கியும் தாமதிக்கும் பொலிஸார்: முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு | Police Defying Court Order Vedukunari

நீதிமன்ற உத்தரவை மீறி சைவ சமய வழிபாடுகளை நடத்தியதற்காக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டமை தொடர்பாக கடந்த மார்ச் 27ஆம் திகதி, கொழும்பு தும்முல்லையில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலகத்திலும், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிலும் 8 பேர் முறைப்பாடு செய்தனர்.

தவறு செய்த பொலிஸ் அதிகாரிகளை குற்றவியல் தண்டனைச் சட்டக் கோவையின் கீழ் தண்டிக்கப்பட வேண்டும் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் கோரும் அவர்கள், தங்களுக்கு ஏற்பட்ட மன உளைச்சல் மற்றும் அவமானங்களுக்கு இழப்பீடு வழங்குமாறும் தமது முறைப்பாட்டில் கோரிக்கை விடுத்திருந்தனர்.

மேலும், வெடுக்குநாரி மலையில் அமைந்துள்ள ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் எதிர்காலத்தில் சுதந்திரமாக வழிபாடு நடத்த இடமளிக்குமாறும், ஆலயத்திலிருந்து பொலிஸார் எடுத்துச் சென்ற பூசை பொருட்கள் உள்ளிட்ட அனைத்து பொருட்களையும் மீள கையளிக்க ஏற்பாடு செய்யுமாறும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் அவர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

யாழில் இளம் தாயின் மரணத்துடன் தொடர்புடையவர் என கூறப்படும் நபர் சாணக்கியனின் பயிற்சி முகாமில்! வெடித்தது புதிய சர்ச்சை

யாழில் இளம் தாயின் மரணத்துடன் தொடர்புடையவர் என கூறப்படும் நபர் சாணக்கியனின் பயிற்சி முகாமில்! வெடித்தது புதிய சர்ச்சை

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு, Scarborough, Canada

04 Jun, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், மாங்குளம், London, United Kingdom

09 Jul, 2012
மரண அறிவித்தல்

அனலைதீவு, அராலி, Toronto, Canada

06 Jul, 2025
மரண அறிவித்தல்

திருகோணமலை, சுதுமலை, Warendorf, Germany

30 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், ஆனைக்கோட்டை

20 Jun, 2024
மரண அறிவித்தல்

சங்கானை, சூரிச், Switzerland

05 Jul, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, சங்கத்தானை, London, United Kingdom

04 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வட்டக்கச்சி

11 Jul, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

காரைநகர், கொழும்பு

11 Jun, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கனடா, Canada

08 Jul, 2010
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், முல்லைத்தீவு

08 Jul, 2018
10ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை வடக்கு, கொக்குவில், சரவணை மேற்கு, வெள்ளவத்தை

07 Jul, 2023
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன் வடக்கு, நியூஸ்லாந்து, New Zealand

05 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய் மேற்கு, Markham, Canada

08 Jul, 2020
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

24 Jun, 2018
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Scarborough, Canada

06 Jul, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

01 Jul, 2023
மரண அறிவித்தல்

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

05 Jul, 2025
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

07 Jun, 2025
நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், London, United Kingdom

30 Jun, 2012
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பேர்ண், Switzerland

07 Jul, 2015
2ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, கொழும்பு, ஸ்ருற்காற், Germany

06 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

திருகோணமலை, சுன்னாகம், London, United Kingdom

26 Jun, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Paris, France

28 Jun, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை வடக்கு, Hamburg, Germany

28 Jun, 2025
மரண அறிவித்தல்

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், இத்தாலி, Italy, India

04 Jul, 2018
6ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US