வன்னி விளாங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் சுடரேற்ற சென்றவர்கள் மீது பொலிஸார் கெடுபிடி
முல்லைத்தீவு - வன்னிவிளாங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் மாலை 06 .05 மணிக்கு சரியாக சுடர் ஏற்ற விடாது பொலிஸார் தடைகளை ஏற்படுத்தியுள்ளனர்.
வன்னிவிளான்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் பொலிஸாரின் தடைகளுக்கு மத்தியில் இரு இடங்களில் அஞ்சலி இடம்பெற்றது.
கோவிட்-19 நிலையை காரணங்காட்டி 50 பேரை மாத்திரம் உள்ளே அனுமதித்துவிட்டு ஐம்பது மீற்றருக்கு அப்பால் பின்னர் வந்தவர்களை தடுத்து நிறுத்திய பொலிஸார் முதலில் சென்றவர்கள் தீபமேற்றி விட்டு வெளியேறிய பின் மீண்டும் ஐம்பது பேரை அனுப்புவதாக கூறியுள்ளனர்.
இதனையடுத்து 06.05 மணிக்கே நாங்கள் அனைவரும் ஒன்றாகவே தீபமேற்ற வேண்டும் என்று கோரியபோதும் பொலிஸார் உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை.அச்சமயத்தில் அவ்விடத்தில் நின்று ஒளிப்படம் எடுத்த ஊடகவியலாளர்களுடனும் பொலிஸார் கடுமையாக நடந்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே நேரம் நெருங்கி வரவே சுடர் ஏற்ற சென்ற எல்லோரும் ஒன்றாக சேர்ந்து துயிலுமில்ல முன் வீதியோரத்திலேயே பொலிஸாரின் முன்னிலையில் தீபங்களை ஏற்றி அஞ்சலிகளை மேற்கொண்டனர் .
இதனிடையே மாவீரர்களின் பெற்றோரின் அழுகுரல்கள் "ரோட்டுக்கரையிலயா என்ற தெய்வத்துக்கு விளக்கேற்றவேணும்" "ஐயோ என்ர சாமி" என விம்மி அழுதவாறு சுடரேற்றி அஞ்சலித்துள்ளனர்.
தொடர்புடைய செய்திகள்...
மாவீரர்களை நினைவேந்திய அனைவரும் கூண்டோடு கைதாகுவார்கள்! அரசு எச்சரிக்கை
மாவீரர்களை நினைவேந்திய பீற்றர் இளஞ்செழியன் கைது
வல்வெட்டித் துறையில் இராணுவ முற்றுகையை உடைத்தெறிந்து கண்ணீருடன் மாவீரர்களுக்கு அஞ்சலி