திருடன் திருடிய தங்க ஆபரணங்களை வீட்டுக்கு கொண்டு சென்ற பொலிஸ் அதிகாரி கைது
வாழைச்சேனையில் வீடு ஒன்றை உடைத்து திருடன் திருடிய பொருட்களை தனது வீட்டிற்கு கொண்டு சென்ற பொலிஸ் அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கைது நடவடிக்கையானது நேற்றையதினம்(29.4.2026) மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இது பற்றி தெரியவருவதாவது, வாழைச்சேனை பொலிஸ் பிரதேசத்தில் கடந்த 21ஆம் திகதி வீடு ஒன்றை உடைத்து அங்கிருந்த 65 ஆயிரம் ரூபா பணம் மற்றும் 7 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க ஆபரணங்கள் திருட்டுப் போயுள்ளது.
விசாரணை
இந்த திருட்டுச் சம்பவம் தொடர்பாக நாவலடி பகுதியைச் சேர்ந்த திருடன் ஒருவரை கடந்த செவ்வாய்க்கிழமை கைது செய்த பொலிசார் அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் குறித்த திருடன் திருடிய தங்க ஆபரணங்கள் பணம் என்பவற்றை வீட்டில் வைத்திருந்துள்ளார்.

இதன்போது திருடனின் வீட்டிற்கு வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்து தற்போது ஆயித்தியமலை பொலிஸ் நிலையத்திற்கு இடமாற்றப்பட்ட பொலிஸ் அதிகாரி சென்று நான் தான் இந்த சம்பவத்தை விசாரணை செய்து வருவதாக கூறி திருடனிடம் இருந்து திருடப்பட்ட தங்க ஆபரணங்கள் மற்றும் பணத்தை வாங்கி எடுத்துக் கொண்டார்.
இதனையடுத்து பொலிஸ் அதிகாரி அவரது நண்பர் ஒருவரிடம் இதைனை வைத்திருக்குமாறு அந்த திருட்டுப் பொருட்களை கொடுத்துள்ளார் என பொலிசாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
கைது
இதையடுத்து ஆயித்தியமலை பொலிஸ் நிலையத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டு விசேட நடவடிக்கைக்காக பாசிக்குடா சுற்றுலா மையத்தில் கடமைக்காக கடமையாற்றி வந்த குறித்த பொலிஸ் அதிகாரியை நேற்று மாலை கைது செய்ததுடன் நண்பனிடம் கொடுத்து வைத்திருந்த திருட்டு தங்க ஆபரணங்கள் மற்றும் பணத்தை பொலிஸார் மீட்டுள்ளனர்.

இதில் கைது செய்யப்பட்டவரை வாழைச்சேனை நீதிமன்றில் இன்று(30.4.2026) முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அய்யனார் துணை சீரியலில் அடுத்து நடக்கவிருப்பது இதுதான்.. மீண்டும் என்ட்ரி கொடுத்த கதாபாத்திரங்கள்.. Cineulagam