நாடளாவிய ரீதியில் குவிக்கப்பட்டுள்ள பொலிஸார்! பாதுகாப்பு தீவிரம்
இலங்கையின் 74வது சுதந்திர தின கொண்டாட்டத்தினை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கமைய,கொழும்பின் பல பகுதிகளில் பொலிஸார் விசேட சோதனை நடவடிக்கைகளிலும்,ரோந்து நடவடிக்கையிலும் ஈடுபட்டுள்ளனர்.
இன்றை தினம் இடம்பெறவுள்ள 74வது சுதந்திர தின கொண்டாட்டத்தின் பாதுகாப்பிற்காக 3000 இற்கும் மேற்பட்ட அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பொலிஸார், விசேட அதிரடிப்படை மற்றும் ஆயுதப்படையினரின் உதவியுடன் பாதுகாப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. தேசிய சுதந்திர தின கொண்டாட்டங்களை முன்னிட்டு கொழும்பு மாநகரம் மற்றும் மேல் மாகாணத்தை உள்ளடக்கிய வகையில் விசேட பாதுகாப்பு திட்டமொன்றும் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, இன்றைய தினம் பெப்ரவரி 04ம் திகதி 21 வீதிகளில் போக்குவரத்து மட்டுப்படுத்தப்படும் எனவும், பொதுமக்களுக்கு அசௌகரியம் ஏற்படாத வகையில் அந்த வீதிகளுக்கு மாற்றுப் பாதைகளை பயன்படுத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்திருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, 74 வது சுதந்திர தின அணிவகுப்பை முன்னிட்டு இவ்வருடம் கடற்படையினரின் 25 சல்யூட் ஷாட்கள் மற்றும் விமானப்படையினரால் விமானக் கண்காட்சி நடத்துவதற்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
இதன்படி, விழா நடைபெறும் நாடு சார்பில் காலி முகத்திடலில் இருந்து இலங்கை கஜபாகு கப்பலில் இருந்து 25 சல்யூட் ஷாட்கள் வழங்க ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதுடன், முப்படைகளுடன் காலாட்படை இணைந்து 26 விமானங்கள் மற்றும் 50 விமானிகளின் அணிவகுப்பு வான்வெளியில் காட்சியளிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
என்னை கடத்திட்டு போயிட்டாங்க.. ஜேசன் சஞ்சய் வீடியோ வைரல்! என்ன சொல்லி இருக்கிறார் பாருங்க Cineulagam
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan
போட்றா வெடிய, விஜய்யின் ஜனநாயகன் படத்திற்கு கிடைத்த தணிக்கை சான்றிதழ்... ரிலீஸிற்கு தயாரான படம் Cineulagam
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri
குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடியுள்ள CM விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர்... போட்டோஸ் இதோ Cineulagam