கிளிநொச்சி மற்றும் வவுனியாவில் மதமாற்றத்தை தடுத்து நிறுத்துமாறு முறைப்பாடு
கிளிநொச்சி மற்றும் வவுனியாவில் மத அமைப்பொன்றின் தலைமையில் இடம்பெறுகின்ற மதமாற்றத்தை தடுக்குமாறு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
கிளிநொச்சி மற்றும் வவுனியாவில் பல்வேறு பகுதிகளில் இன்று (31.01.2023) தொடக்கம் பெப்ரவரி 11 ஆம் திகதி வரை பல்வேறு பகுதிகளில் மத அமைப்பொன்றின் தலைமையில் சில நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில் மதபோதகர்கள் கிராமங்களுக்கு சென்று அங்கு வசிக்கும் மக்களை மதமாற்றம் மேற்கொண்டு வருவதாகவும், இதனைத் தடுத்து நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.