ஹெரோயின் போதைப்பொருளுடன் பொலிஸார் கைது
ஹெரோயின் உட்பட்ட போதைப்பொருட்களின் அதிகரித்த பாவனைக்கு பொலிஸ் உட்பட்ட படைத்தரப்பின் மீதும் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு வருகின்றன.
இதற்கு ஒரு உதாரணமாக ஹெரோயின் போதைப் பொருளை வைத்திருந்த இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் நேற்று(21) இரவு பிலியந்தலையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது நடவடிக்கை
குறித்த உத்தியோகத்தர்கள் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் குழுவொன்றினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தநிலையில், சந்தேக நபர்கள் இருவரும், பொலிஸ் பரிசோதகர் மற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் பதவிநிலையைக் கொண்டவர்கள் என்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இரண்டு உத்தியோகத்தர்களும் பொலிஸ் விசேட அதிரடிப்படையின் புலனாய்வுப் பிரிவின் ஒரு பகுதியாக செயற்பட்ட நிலையிலேயே போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
365 ஆண்டுகால வரலாற்றில் முதல்முறை - பிரித்தானிய அமைப்பில் இடம்பிடித்த தமிழ்நாட்டு பெண் News Lankasri
முத்துவேலுக்கு புற்றுநோய் என தெரிந்ததும் பாண்டியன் செய்த காரியம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
டெக்சாஸ் தடுப்புக்காவலில் 90 நாட்களாக அடைக்கப்பட்டுள்ள இந்திய குடும்பம்: சிதையும் குழந்தைகள் கனவு News Lankasri