பொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார்
மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் மற்றும் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீது கொள்ளுப்பிட்டியில் வைத்து தாக்குதல் நடத்திய சந்தேக நபர்களை கைது செய்வதற்காக பொலிஸ் திணைக்களம் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளது.
தாக்குதல்கள் மற்றும் பொலிஸ் வாகனத்திற்கு சேதம் விளைவித்த முக்கிய நபர்களை அடையாளம் கண்டுள்ளதாகவும், அவர்களின் சரியான அடையாளத்தை கண்டறிய அவர்கள் தொடர்பான தகவல்களை கோருவதாகவும் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
உதவி கோரும் பொலிஸார்

அதற்கமைய, இவர்கள் தொடர்பில் ஏதேனும் தகவல் தெரிந்தால் கீழே கொடுக்கப்பட்டுள்ள தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளுமாறு பொலிஸ் ஊடகப் பிரிவு பொதுமக்களைக் கேட்டுக் கொள்கிறது என பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.'
மேலும் தகவல்களை வழங்க பொலிஸ் தலைமையகம் 0718591735, 0718592735, 0718591733 ஆகிய தொலைபேசி இலக்கங்களை வழங்கியுள்ளது.
மேல் மாகாணத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் மே மாதம் 10ஆம் திகதி குழுவொன்றினால் தாக்கப்பட்டதில் காயமடைந்திருந்தார்.
கொழும்பு - கங்காராம விஹாரைக்கு அருகில் இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றிருந்தது.
சம்பவம் இடம்பெற்ற வேளையில் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தேசபந்து, சிவில் உடையில் இருந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
விறுவிறுப்பாக11 மணிநேரம் நடைபெற்ற வாக்குப்பதிவு! ஆறு மணி கடந்து வரிசையில் நிற்கும் வாக்காளர்களுக்கு முக்கிய அறிவிப்பு
தமிழ்நாடு அரசியல் களத்தை அதிரவைத்துள்ள மாபெரும் புரட்சி! அதிரடி திருப்பங்களுடன் வெளியாகவுள்ள இறுதி முடிவுகள்
கனேடிய பொலிஸாரின் அலட்சியத்தால் பலியான யாழ். இளைஞனால் 6 பேருக்கு மறுவாழ்வு.. உடலை காண காத்திருக்கும் தாய்
காந்திமதியை வீட்டைவிட்டு வெளியே போகச்சொன்ன கதிர், ஷாக்கான குடும்பம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் புரொமோ Cineulagam
வரும் திங்கள் முதல் விஜய் டிவியின் சில சீரியல்களின் நேரம் மாற்றம்... எந்தெந்த தொடர்கள் தெரியுமா? Cineulagam
ஆண்களுடனான உறவைத் தவிர்ப்பது பெண்களுக்கு நல்லது... ஜேர்மனியில் சர்ச்சையை உருவாக்கியுள்ள நபர் News Lankasri
வாய்ப்பே இல்லை... ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் ட்ரம்பிற்கு அடுத்த நெருக்கடி அளித்த ஈரான் News Lankasri
விஜய் டிவியில் ஹிட் சீரியலில் என்ட்ரி கொடுத்துள்ள பாண்டியன் ஸ்டோர்ஸ் புகழ் சுஜிதா... எந்த தொடர் தெரியுமா? Cineulagam