மகிந்தவுக்கு ஏற்பட்டுள்ள உயிராபத்து: எடுக்கப்பட்டுள்ள அவசர முடிவு
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்பு தொடர்பில் பாதுகாப்பு செயலாளர் மற்றும் பொலிஸ் மா அதிபருடன் அடுத்த வாரம் சந்திப்பொன்றினை நடத்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) முடிவு செய்துள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்புப் பணியாளர்கள் பயன்படுத்தும் அனைத்து வாகனங்களையும் அரசாங்கம் கையகப்படுத்தியுள்ளதால், அவருக்கு பாதுகாப்பு வழங்குவதில் கடுமையான சிக்கல் ஏற்பட்டுள்ளதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதியின் ஊடகப் பேச்சாளர், சட்டத்தரணி மனோஜ கமகே கூறியுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்ட குண்டு துளைக்காத வாகனம் மற்றும் இரண்டு வாகனங்கள் அரசாங்கத்தின் அறிவிப்பின்படி மீள ஒப்படைக்கப்பட்டுள்ளன.
மகிந்தவுக்கு உதவ இரு நாடுகள் தயார்
இந்நிலையில், பாதுகாப்புப் பணியாளர்களிடம் தற்போது பயணிக்க ஒரு வாகனம் கூட இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்புக்காக உதவத் தயாரென இரண்டு நாடுகள் உறுதிமொழி வழங்கியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மகிந்த பயன்படுத்திய புல்லட் ப்ரூவ் எனப்படும் குண்டுகள் துளைக்காத வாகனங்களை அரசாங்கம் மீளப்பெற்றுள்ள நிலையில், அப்படியான வாகனங்களை வழங்க இரு நாடுகள் முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




