பிரித்தானியாவில் பிரதமர் ஹரிணி தங்கியிருந்த இல்லம்.. 16 மில்லியன் விவகாரத்தில் மீண்டும் ரணிலுக்கு சிக்கல்
இலங்கை அரசியல் களத்தில், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் தற்போதைய பிரதமர் ஹரிணி அமரசூரிய ஆகியோரின் பிரித்தானிய விஜயங்களின் போதான பொதுப்பண பயன்பாடு விதம் பேசுபொருளாகியுள்ளது.
22 ஆவது பொதுநலவாய கல்வி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் ஹரிணி அமரசூரிய பிரித்தானியா சென்றிருந்தார்.
இதன்போது, பிரதமர் ஹரிணி தேவையில்லாத செலவுகளைத் தவிர்ப்பதற்காக அங்குள்ள இலங்கை உயர்ஸ்தானிகரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் தங்கியிருந்தார்.
வழக்கமாக அரசியல்வாதிகள் அரச செலவில் நட்சத்திர விடுதிகளில் தங்குவதே நடைமுறையாக இருந்த நிலையில், பிரதமரின் இச்செயல் பேசுபொருளாகியுள்ளது.
அரச விடுதியில் தங்கிய ஹரிணி
விடுதிச் செலவுகளைக் குறைப்பதற்காகவே இந்த இல்லம் அமைக்கப்பட்டிருந்தாலும், நீண்ட காலத்திற்குப் பிறகு இதனைப் பயன்படுத்தி பிரதமர் ஒரு புதிய முன்மாதிரியை ஏற்படுத்தியுள்ளார்.

மறுபுறம், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பிரித்தானிய விஜயத்தின் போது 16.6 மில்லியன் ரூபாய் பொதுப்பணம் முறைகேடு செய்யப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களத்தில் சர்ச்சை வெடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தற்போது, ரணிலின் பயணம் தொடர்பில் இருவேறு கருத்துக்கள் நிலவுகின்றன, அதாவது, வழக்குத் தொடர போதிய ஆதாரங்கள் இல்லை எனவும் வழக்குத் தொடர முடியும் எனவும் வாதம் எழுந்துள்ளது.
விசாரணைகளை மேற்பார்வையிட்ட பிரதி சொலிசிட்டர் ஜெனரல் வசந்த பெரேரா, ரணில் விக்ரமசிங்க அல்லது முன்னாள் ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்கவிற்கு எதிராக குற்றவியல் வழக்குப் பதிவு செய்ய போதிய ஆதாரங்கள் இல்லை எனக் கூறி தனது பொறுப்பில் இருந்து விலகியுள்ளார்.
CIDயிடம் இருந்து பதிலில்லை..
கியூபாவிலிருந்து நியூயோர்க் ஊடாக இலங்கை திரும்பும் வழியில் ரணில் விக்ரமசிங்க பிரித்தானியாவில் தங்குவது வழமையான ஒன்றுதான் என்பதால், வொல்வர்ஹாம்டன் (Wolverhampton) பல்கலைக்கழக அழைப்பிதழ் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அவர் அங்கு தங்கியிருப்பார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், குற்றப்புலனாய்வுத் திணைக்கள (CID) குழுவினர் பரஸ்பர சட்ட உதவிச் சட்டத்தின் (MLA) கீழ் முறையான அனுமதியின்றி பிரித்தானியா சென்றதால், அங்கு அவர்களால் உத்தியோகபூர்வ வாக்குமூலங்களைப் பதிவு செய்ய முடியாமல் போனதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதேநேரம், இந்த விசாரணையின் தலைமை மேற்பார்வை அதிகாரியான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் மற்றும் CID அதிகாரிகள், தற்போதைய ஆதாரங்களின் அடிப்படையில் முன்னாள் ஜனாதிபதிக்கு எதிராக வழக்குத் தொடரலாம் என்ற மாற்றுக்கருத்தை முன்வைத்துள்ளளர்.
அத்துடன், ரணிலின் முன்னாள் செயலாளரைக் கைது செய்ய போதிய ஆதாரங்கள் இருப்பதாக அரச சட்டத்தரணி சமதாரி பியசேனவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதற்கிடையில், பிரித்தானியாவில் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளின் விபரங்களை வழங்குமாறு சட்டமா அதிபர் திணைக்களம் விடுத்த எழுத்துப்பூர்வ கோரிக்கைக்கு குற்றப்புலனாய்வு திணைக்களம் (CID) இதுவரை பதிலளிக்கவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.
அரசின் முக்கிய அதிகாரிக்கு இழைக்கப்பட்ட அநீதி.. உயர் நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பால் கபில பெரேராவின் திடீர் தீர்மானம்
அறிவிக்கப்படாமல் முடிவுற்ற ஈரான் மீதான யுத்தம் 4 நாட்கள் முன்
குரு பெயர்ச்சி பலன்கள் : 12 ஆண்டுகளின் பின் ராஜ வாழ்க்கை பெற போகும் ரிஷபம்! முழு பலன்கள் இதோ Manithan
விளம்பரத்தில் நடிக்க நடிகர் அஜித்குமார் வாங்கும் சம்பளம் எத்தனை கோடி தெரியுமா?... அடேங்கப்பா Cineulagam
லண்டனின் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவருக்கு நேர்ந்த சோகம்: ஆண், பெண் மற்றும் குழந்தை உயிரிழப்பு News Lankasri