பிரதமர் ஹரிணி அமரசூரிய கனடாவுக்கு விஜயம்
இலங்கை பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இன்று அதிகாலை கனடாவுக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
கல்வி, உயர் கல்வி மற்றும் தொழில்நுட்ப கல்வி அமைச்சர் பதவியையும் வகிக்கும் ஹரிணி அமரசூரிய, தெற்காசிய பிராந்திய பிரதிநிதியாக பொதுநலவாய கற்றல் அமைப்பின் Commonwealth of Learning (COL) நிர்வாக சபை கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக கனடா பயணம் மேற்கொண்டுள்ளார்.
இந்த மாநாடு ஜூன் 24 முதல் 26 வரை கனடாவின் வான்கூவர் நகரில் நடைபெற உள்ளது.
இதில், பெண்கள் மற்றும் குழந்தைகளின் கல்வி மற்றும் பயிற்சி, உயர் கல்வி, ஆசிரியர் பயிற்சி, முழுநாள் கல்வி, மற்றும் தொழில்நுட்பத்துடன் கூடிய செயற்பாடான கற்றலை ஊக்குவித்தல் போன்ற முக்கிய துறைகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது.
மேலும், புதுமை மற்றும் ஆராய்ச்சியில் முதலீடு, நிறுவனங்களின் டிஜிட்டல் மாற்றத்துக்கு ஆதரவு, திறன் வாய்ந்த கண்காணிப்பு மற்றும் மதிப்பீட்டு அமைப்புகள், மற்றும் பாலின சமத்துவத்தை மேம்படுத்தல் ஆகிய விடயங்கள் குறித்து முக்கியமாக பேசப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.