மணலாறு துயிலுமில்லத்தில் திரைமறைவில் அரங்கேறிய சதி அம்பலம்..
மாவீரர் தினத்தை முன்னிட்டு மணலாறு காட்டிற்குள் அமைந்துள்ள உதயபீடம் மாவீரர் துயிலுமில்லத்தில் துப்புரவுப்பணிக்குச் சென்றவர்கள் மீது சிறிலங்கா இராணுவத்தினர் தாக்குதல் நடத்தியுள்ளதாக துப்புரவுப்பணிக்கு சென்ற ஒருவர் தெரிவித்துள்ளார்.
அந்தக்காட்டிற்குள் தங்களை வரவிடாமல் அச்சுறுத்துவதற்காகவே சிறிலங்கா இராணுவத்தினரும் அளம்பில் புலனாய்வுத்துறையும் இணைந்து மேற்கண்ட செயற்பாட்டை செய்ததாக அவர் குற்றம்சாட்டினார். குறித்த காணொளியானது மாவீரர்களின் பெற்றோர்களிடையே விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தநிலையில், குறித்த நபர் என்பிபி அரசாங்கத்திற்கு அபகீர்த்தி ஏற்படுத்த வேண்டுமென இவ்வாறு செய்ததாக தேசிய மக்கள் சக்தியின் முல்லைத்தீவு மாவட்டம், கரைதுறைப்பற்று பிரதேசத்தின் இணைப்பாளர் யேசுரட்ணம் இராசகுமாரன் தெரிவித்துள்ளார்.
லங்காசிறிக்கு வழங்கிய நேர்காணலிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,