ரணிலுக்கு நிபந்தனையற்ற ஆதரவு! பீ.ஹரிசன் உறுதி
அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு நிபந்தனையற்ற ஆதரவளிப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் உதவி தவிசாளர் பீ.ஹரிசன் உறுதியளித்துள்ளார்.
அநுராதபுரத்தில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், இலங்கையின் ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க மீண்டும் தெரிவு செய்யப்படுவதற்கு தம்முடன், 100 பிரதேசசபை உறுப்பினர்களும் நிபந்தனையின்றி ஆதரவளிக்க தயாராக இருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
உள்ளூராட்சி சபைத் தேர்தல்
அத்துடன் 2023 உள்ளூராட்சி சபைத் தேர்தல் மிகவும் தாமதமானது குறித்து அவர் கருத்து தெரிவிக்கையில், அவ்வாறான தேர்தல் நடத்தப்படுவதற்கான அறிகுறி உள்ளது.
அதேநேரத்தில் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படுவதற்கான சாத்தியம் அதிகம் உள்ளது. இது 2024 ஜூன் அல்லது ஜூலையில் நடைபெற வாய்ப்புள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |