இலங்கையில் ஒருவர் ஆண்டுக்கு கிலோ 12 பிளாஸ்டிக் பயன்படுத்துகின்றனர்
ஒரு இலங்கையர் வருடத்திற்கு சுமார் கிலோ 12 பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துகிறார் என சுற்றாடல்துறை பிரதி அமைச்சர் என்டன் ஜயகொடி தெரிவித்துள்ளார்.
இன்று அரச தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற உலக சுற்றுச்சூழல் தின ஊடக சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இந்த நிகழ்வில் சுற்றாடல் அமைச்சர் டாக்டர் தம்மிக பட்டபெந்தி மற்றும் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

ஜூன் 5ஆம் திகதி, கேகாலை நகரத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் தேசிய நிகழ்வு இடம்பெற உள்ளது.
இந்த நிகழ்வில் “கேகாலை பிரகடனம்” என்ற சுற்றுச்சூழல் அறிக்கையை ஜனாதிபதி வழங்குவார்.
வருடத்திற்கு சுமார் 250,000 மெட்ரிக் டன் பிளாஸ்டிக் கழிவு இலங்கையில் உருவாகின்றது. அதில் 10% மட்டுமே மறுசுழற்சி செய்யப்படுகிறது.
எஞ்சிய பிளாஸ்டிக் கழிவுகள் மணல் மேடுகள், கடற்கரை, காட்டுப் பகுதியில் குவிக்கப்படுகின்றன.
“பிளாஸ்டிக் கழிவுகளில் 73% வரை மட்டுமே சேகரிக்கப்படுகிறது. சேகரித்த பிறகு கூட, அதன் பெரும்பகுதி குப்பைமுகடுகளாக மட்டுமே முடிகின்றது.” என தெரிவிக்கப்படுகின்றது.
திருமணம் செய்யப்போகும் விஜய் தேவரகொண்டா-ராஷ்மிகா இருவருக்கும் உள்ள வயது வித்தியாசம்... எவ்வளவு தெரியுமா? Cineulagam
புதருக்குள் இழுத்துச் செல்லப்பட்டு... வெளிநாட்டில் டாக்ஸி சாரதியால் மீட்கப்பட்ட பிரித்தானிய மாணவி News Lankasri