வட்டவளையில் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட தோட்ட தொழிலாளர்கள் (Video)

Protest Sri Lanka Watawala Plantation Workers
By Independent Writer Nov 30, 2021 09:26 AM GMT
Independent Writer

Independent Writer

in சமூகம்
Report

வட்டவளையில் கடந்த சனிக்கிழமை முதல் தொடர் வேலைநிறுத்த போராட்டத்தில் தோட்ட தொழிலாளர்கள் ஈடுப்பட்டு வருகின்றனர்.

வட்டவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மௌன்ஜீன் தோட்டத்தில் 6ம் இலக்க தேயிலை மலையில் பாரிய மரங்களைத் தறித்து சுமார் 6000 தேயிலைச் செடிகளை வீணாக்கி இருப்பதாகவும் இதனால் தங்களுடைய வாழ்வாதாரம் பாரிய கேள்விக்குறிக்குள்ளாகியிருப்பதாகவும் இதற்கு தீர்வினை பெற்றுக்கொடுக்குமாறு கோரி கடந்த சனிக்கிழமை முதல் தொடர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

பெருந்தோட்ட யாக்கத்திற்கு சொந்தமான மௌன்ஜீன் தோட்டத்தில் சுமார் 350க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்கின்றனர்.


குறித்த தோட்டத்தில் வருமானம் இன்மை காரணமாக சுமார் 250 க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் ஏனைய ஆடைத்தொழிற்சாலைகள், தனியார் தோட்டங்கள், கடைகள் என பல்வேறு தொழில்களுக்கு சென்றுள்ளனர்.

குறித்த தோட்டத்தில் உரிய பராமரிப்பு இன்றி தேயிலைச்செடிகள் காட்சியளிப்பதும், மக்கள் தோட்டத்தொழிலில் இருந்து விலகிச் செல்வதற்கு ஒரு காரணம் என இங்கு வாழும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் குறித்த தோட்டத்தில் 90 குடும்பங்களைச் சேர்ந்த தொழிலாளர்களே தற்போது தோட்டத்தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.

வருமானம் இன்மை காரணமாக தோட்ட நிர்வாகம் வாரத்துக்கு இரண்டு நாள் மாத்திரம் தொழிலில் ஈடுபட சந்தர்ப்பம் வழங்குவதாகவும், இந்நிலையில் இத்தோட்டத்தில் தொழிலாளர்கள் கொழுந்து பறிக்கும் தேயிலை மலையில் மரம் வெட்டுவதற்காக பல ஏக்கர் அழிக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் 6000 தேயிலைச் செடிகள் வரை அழிக்கப்பட்டுள்ளதாக இவர்கள் தெரிவிக்கின்றனர்.

இது குறித்து அரசியல் தலைவர்களுக்கும், தொழிற்சங்க தலைவர்களுக்கும் தெரிவித்துள்ளதாகவும் அவர்கள் வந்து பார்வையிட்டு சென்றுள்ளதாகவும் ஆனால் சரியான தீர்வினை இதுவரை பெற்றுக்கொடுக்கவில்லையென அவர்கள் தெரிவிக்கின்றனர்.

எனவே தேயிலை தோட்டத்தின் வருமானத்தை நம்பிவாழும் 90 குடும்பங்களுக்கு அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

இது குறித்து இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உபதலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினருமான கணபதி கனகராஜ் கருத்து தெரிவிக்கையில்,

குறித்த தோட்டத்தில் பாரிய மரங்களை தறித்து சுற்றுப்புற சூழலை அழிவடையச்செய்து தேயிலைச் செடிகளை அழித்துள்ளதாகவும், பாரிய இயந்திரப் பயன்பாட்டின் காரணமாக இவர்களின் வாழ்வாதாரம் அழிக்கப்பட்டுள்ளதாகவும் இது குறித்து ராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளதாகவும் தோட்ட நிர்வாகத்திற்கு மரம் வெட்டுவதை உடன் நிறுத்துமாறு அறிவுறுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மரம் தறிப்பது குறித்து கூட்டு ஒப்பந்தத்தில் இணக்கம் காணப்பட்ட விடயங்களுக்கு ஏற்ப நடந்து கொள்ளுமாறு பெருந்தோட்ட யாக்கதிற்கு அறிவித்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இது குறித்து தோட்டத்தொழிலாளர்கள் கருத்து தெரிவிக்கையில்,

நாங்கள் காலம் காலமாக பாட்டம் முப்பாட்டன் முதல் இந்த தோட்டத்தை நம்பி தான் வாழ்ந்து வருகிறோம்.

கடந்த காலங்களில் இந்த தோட்டத்தில் சுமார் 350 மேற்பட்டவர்கள் தேயிலை தோழிலில் ஈடுப்பட்டு வந்தார்கள்.

இந்நிலையில் தோட்டத்தை உரிய வகையில் பாராமறிக்காததன் காரணமாக இன்று 90 தொழிலாளர்கள் வரை குறைந்துள்ளனர்.

தேயிலை தோட்டங்களும் காடுகளாக மாற்றப்பட்டுள்ளன. தொழிலாளர்கள் தேயிலை மலையில் வேலை செய்ய முடியாத ஒரு நிலையே காணப்படுகின்றன.

தோட்ட நிர்வாகம் தேயிலையினை பாதுகாப்பதற்கு எவ்வித நடவடிக்கையும் எடுப்பதில்லை.

உரம் மருந்து போன்றன பயன்படுத்தாதன் காரணமாகவே இந்நிலை உருவாகியுள்ளன.

இவர்கள் அனைவரும் இந்த தொழிலை மாத்திரம் தான் நம்பியிருக்கின்றனர்.

ஆனால் நிர்வாகம் இவர்களுக்கு உரிய நேரத்தில் சம்பளம் முற்பணம் ஆகியன பெற்றுக்கொடுப்பதில்லை பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள தொழிலாளர்கள் எவ்வாறு உயிர் வாழ்வது, எவ்வாறு தங்களது குழந்தைகளை படிக்க வைப்பது.

எனவே இது குறித்து தோட்ட நிர்வாகமும், அரசாங்கமும் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ளனர்.  

10ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்குவேலி, தெஹிவளை

05 Mar, 2016
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

தையிட்டி, Walthamstow, United Kingdom

05 Feb, 2026
மரண அறிவித்தல்

சில்லாலை, பரிஸ், France

01 Mar, 2026
நன்றி நவிலல்

புலோப்பளை, London, United Kingdom

01 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள், சூரிச், Switzerland

05 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Ajax, Canada

06 Mar, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பாவற்குளம், Toronto, Canada

05 Mar, 2022
நன்றி நவிலல்

நீராவியடி, London, United Kingdom

06 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஊரெழு கிழக்கு, கொழும்பு, London, United Kingdom

26 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, உருத்திரபுரம்

27 Feb, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Ilford, United Kingdom

06 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தம்பலகாமம், மருதங்கேணி, East Ham, United Kingdom

06 Mar, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

11 Mar, 2020
மரண அறிவித்தல்

பலாலி கிழக்கு, நியூ யோர்க், United States

28 Feb, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி

16 Feb, 2025
மரண அறிவித்தல்

குப்பிளான், Oshawa, Canada

27 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை கிழக்கு, Paris, France

07 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

27 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், சிலாபம், Scarborough, Canada

27 Feb, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி வடக்கு

14 Feb, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, ெங்காளன், Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஆனையிறவு, புளியம்பொக்கணை, வவுனியா, கிளிநொச்சி, Argenteuil, France

02 Mar, 2026
மரண அறிவித்தல்

கொம்மந்தறை, Toronto, Canada

02 Mar, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய் வடக்கு, கைதடி, Wellington, New Zealand, சிட்னி, Australia

07 Mar, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலம்பிராய், யாழ்ப்பாணம்

16 Feb, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய் தெற்கு, கொழும்பு, உரும்பிராய், Toronto, Canada

28 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, ஜேர்மனி, Germany

03 Mar, 2016
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, மாதனை, மாவிட்டபுரம், Mississauga, Canada

02 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், புத்தளம்

02 Mar, 2023
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Brampton, Canada

03 Mar, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US