வட்டவளையில் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட தோட்ட தொழிலாளர்கள் (Video)

Protest Sri Lanka Watawala Plantation Workers
By Independent Writer Nov 30, 2021 09:26 AM GMT
Independent Writer

Independent Writer

in சமூகம்
Report

வட்டவளையில் கடந்த சனிக்கிழமை முதல் தொடர் வேலைநிறுத்த போராட்டத்தில் தோட்ட தொழிலாளர்கள் ஈடுப்பட்டு வருகின்றனர்.

வட்டவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மௌன்ஜீன் தோட்டத்தில் 6ம் இலக்க தேயிலை மலையில் பாரிய மரங்களைத் தறித்து சுமார் 6000 தேயிலைச் செடிகளை வீணாக்கி இருப்பதாகவும் இதனால் தங்களுடைய வாழ்வாதாரம் பாரிய கேள்விக்குறிக்குள்ளாகியிருப்பதாகவும் இதற்கு தீர்வினை பெற்றுக்கொடுக்குமாறு கோரி கடந்த சனிக்கிழமை முதல் தொடர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

பெருந்தோட்ட யாக்கத்திற்கு சொந்தமான மௌன்ஜீன் தோட்டத்தில் சுமார் 350க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்கின்றனர்.


குறித்த தோட்டத்தில் வருமானம் இன்மை காரணமாக சுமார் 250 க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் ஏனைய ஆடைத்தொழிற்சாலைகள், தனியார் தோட்டங்கள், கடைகள் என பல்வேறு தொழில்களுக்கு சென்றுள்ளனர்.

குறித்த தோட்டத்தில் உரிய பராமரிப்பு இன்றி தேயிலைச்செடிகள் காட்சியளிப்பதும், மக்கள் தோட்டத்தொழிலில் இருந்து விலகிச் செல்வதற்கு ஒரு காரணம் என இங்கு வாழும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் குறித்த தோட்டத்தில் 90 குடும்பங்களைச் சேர்ந்த தொழிலாளர்களே தற்போது தோட்டத்தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.

வருமானம் இன்மை காரணமாக தோட்ட நிர்வாகம் வாரத்துக்கு இரண்டு நாள் மாத்திரம் தொழிலில் ஈடுபட சந்தர்ப்பம் வழங்குவதாகவும், இந்நிலையில் இத்தோட்டத்தில் தொழிலாளர்கள் கொழுந்து பறிக்கும் தேயிலை மலையில் மரம் வெட்டுவதற்காக பல ஏக்கர் அழிக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் 6000 தேயிலைச் செடிகள் வரை அழிக்கப்பட்டுள்ளதாக இவர்கள் தெரிவிக்கின்றனர்.

இது குறித்து அரசியல் தலைவர்களுக்கும், தொழிற்சங்க தலைவர்களுக்கும் தெரிவித்துள்ளதாகவும் அவர்கள் வந்து பார்வையிட்டு சென்றுள்ளதாகவும் ஆனால் சரியான தீர்வினை இதுவரை பெற்றுக்கொடுக்கவில்லையென அவர்கள் தெரிவிக்கின்றனர்.

எனவே தேயிலை தோட்டத்தின் வருமானத்தை நம்பிவாழும் 90 குடும்பங்களுக்கு அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

இது குறித்து இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உபதலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினருமான கணபதி கனகராஜ் கருத்து தெரிவிக்கையில்,

குறித்த தோட்டத்தில் பாரிய மரங்களை தறித்து சுற்றுப்புற சூழலை அழிவடையச்செய்து தேயிலைச் செடிகளை அழித்துள்ளதாகவும், பாரிய இயந்திரப் பயன்பாட்டின் காரணமாக இவர்களின் வாழ்வாதாரம் அழிக்கப்பட்டுள்ளதாகவும் இது குறித்து ராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளதாகவும் தோட்ட நிர்வாகத்திற்கு மரம் வெட்டுவதை உடன் நிறுத்துமாறு அறிவுறுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மரம் தறிப்பது குறித்து கூட்டு ஒப்பந்தத்தில் இணக்கம் காணப்பட்ட விடயங்களுக்கு ஏற்ப நடந்து கொள்ளுமாறு பெருந்தோட்ட யாக்கதிற்கு அறிவித்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இது குறித்து தோட்டத்தொழிலாளர்கள் கருத்து தெரிவிக்கையில்,

நாங்கள் காலம் காலமாக பாட்டம் முப்பாட்டன் முதல் இந்த தோட்டத்தை நம்பி தான் வாழ்ந்து வருகிறோம்.

கடந்த காலங்களில் இந்த தோட்டத்தில் சுமார் 350 மேற்பட்டவர்கள் தேயிலை தோழிலில் ஈடுப்பட்டு வந்தார்கள்.

இந்நிலையில் தோட்டத்தை உரிய வகையில் பாராமறிக்காததன் காரணமாக இன்று 90 தொழிலாளர்கள் வரை குறைந்துள்ளனர்.

தேயிலை தோட்டங்களும் காடுகளாக மாற்றப்பட்டுள்ளன. தொழிலாளர்கள் தேயிலை மலையில் வேலை செய்ய முடியாத ஒரு நிலையே காணப்படுகின்றன.

தோட்ட நிர்வாகம் தேயிலையினை பாதுகாப்பதற்கு எவ்வித நடவடிக்கையும் எடுப்பதில்லை.

உரம் மருந்து போன்றன பயன்படுத்தாதன் காரணமாகவே இந்நிலை உருவாகியுள்ளன.

இவர்கள் அனைவரும் இந்த தொழிலை மாத்திரம் தான் நம்பியிருக்கின்றனர்.

ஆனால் நிர்வாகம் இவர்களுக்கு உரிய நேரத்தில் சம்பளம் முற்பணம் ஆகியன பெற்றுக்கொடுப்பதில்லை பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள தொழிலாளர்கள் எவ்வாறு உயிர் வாழ்வது, எவ்வாறு தங்களது குழந்தைகளை படிக்க வைப்பது.

எனவே இது குறித்து தோட்ட நிர்வாகமும், அரசாங்கமும் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ளனர்.  

மரண அறிவித்தல்

இயற்றாலை, Wellingborough, United Kingdom

07 Dec, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Stouffville, Canada

05 Dec, 2025
மரண அறிவித்தல்

நீர்வேலி தெற்கு, Toronto, Canada

02 Dec, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, Mississauga, Canada

09 Dec, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வவுனியா, Toronto, Canada

11 Dec, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, Hannover, Germany

03 Dec, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோப்பாய், Lingenfeld, Germany

08 Dec, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், வவுனியா, பூந்தோட்டம்

07 Dec, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Vaughan, Canada

12 Dec, 2022
நன்றி நவிலல்

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், கொழும்பு, Chelles, France

08 Nov, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Gevelsberg, Germany

04 Dec, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Saint-Louis, France

09 Dec, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய், ஜெனோவா, Italy

08 Dec, 2010
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அனலைதீவு 3ம் வட்டாரம், Toronto, Canada

05 Dec, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்டத்தரிப்பு, London, United Kingdom

19 Nov, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் வடக்கு, நெல்லியடி வடக்கு

02 Dec, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, புங்குடுதீவு 2ம் வட்டாரம், பிரான்ஸ், France

09 Dec, 2016
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொழும்பு, Markham, Canada

06 Dec, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், பம்பலப்பிட்டி

08 Dec, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம் கிழக்கு, சூரிச், Switzerland

07 Dec, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், நீர்கொழும்பு

20 Nov, 2024
மரண அறிவித்தல்

அத்தாய், London, United Kingdom

29 Nov, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 Nov, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, கட்டுடை, Cornwall, United Kingdom

08 Dec, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், செட்டிக்குளம், பிரான்ஸ், France

29 Nov, 2025
40ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, கோப்பாய்

04 Dec, 1985
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US