தோட்ட நிர்வாகத்தினர் - தொழிலாளர்கள் மோதல்! இரு பெண்கள் உட்பட நால்வர் வைத்தியசாலையில்
தலவாக்கலை, கட்டுக்கலை பிரதேசத்தில் தோட்டத் தொழிலாளர்களுக்கும் தோட்ட நிர்வாகத்துக்கும் இடையில் இன்று ஏற்பட்ட முறுகலில் நால்வர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்று தலவாக்கலைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தொழிலாளர்கள் தம்மைத் தாக்கினர் என தெரிவித்து தோட்டத்தின் உதவி முகாமையாளரும் சிரேஷ்ட அதிகாரி ஒருவரும் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
அதேபோன்று தோட்டத்தின் உப அதிகாரியும், சிரேஷ்ட அதிகாரியும் தாக்குதல் மேற்கொண்டனர் என தெரிவித்து, பெண் தொழிலாளர்கள் இருவர் லிந்துலை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
வெளிப்பிரதேசங்களைச் சேர்ந்த தொழிலாளர்களை அழைத்துவந்து பணியில் ஈடுபடுத்துவதை அடிப்படையாக வைத்து தோட்ட நிர்வாகத்துக்கும் தொழிலாளர்களுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்தச் சம்பவத்தையடுத்து கட்டுக்கலை பிரிவைச் சேர்ந்த சுமார் 150 இற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இன்று பணிப்பகிஷ்கரிப்பை மேற்கொண்டனர்.
சம்பவம் தொடர்பில் தோட்டத் தொழிலாளர்களும் தோட்ட நிர்வாகத்தினரும் தலவாக்கலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.


ரூ.45,000க்கும் குறைவான விலையில் Hero electric scooter வாங்கலாம்.., குறுகிய கால சலுகை மட்டுமே News Lankasri

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: இந்திய உச்சநீதிமன்றத்தின் முடிவு News Lankasri

சரிகமப சீசன் 5 போட்டியாளர்களுக்கு மாபெரும் பரிசுத் தொகை அறிவிப்பு... இத்தனை லட்சத்தில் வீடா? Cineulagam

SBI Special FD திட்டத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால்.., 3 ஆண்டுகளில் திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு? News Lankasri
